சிவகங்கையில் வீரவணக்கநாள் நினைவிடத்தில் போலீஸ் எஸ்.பி. அஞ்சலி
சிவகங்கையில் நடந்த வீர வணக்க நாள் நிகழ்ச்சியில் காவலர் நினைவிடத்தில் போலீஸ் எஸ்.பி. மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
HIGHLIGHTS
1959 ஆம் ஆண்டு லடாக் பகுதியில் சீன ராணுவத்தினர் ஒளிந்திருந்து நடத்திய திடீர் தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்பு படை சி.ஆர்.பி.எஃப். காவலர்கள் உயிரிழந்தனர். கடல் மட்டத்திலிருந்து 14000 அடி உயரத்தில் வீரமரணமடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவு நினைவு கூறும் வகையில் காவலர் வீரவணக்க நாள் ஆண்டுதோறும் அக்டோபர் 21ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
அதன் அடிப்படையில் சிவகங்கை ஆயுதப்படை அலுவலகத்தில் காவலர் வீரவணக்க நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் காவலர்களின் நினைவுத் தூணுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் சீமை சாமி, வெற்றிச்செல்வன் ,அன்பு, பாஸ்கரன், மற்றும் ஆயுதப்படை ஆய்வாளர்கள் ஏராளமான காவல்துறை அதிகாரிகள் பங்கேற்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பின் நாட்டிற்காக வீரமரணமடைந்து வீரர்கள் விட்டுச் சென்ற பணிகளை செய்து முடிப்போம் என்றும் அவர்களின் வீர தியாகங்களின் வீண்போகாது என்று உறுதிமொழியும் ஏற்றுக்கொண்டனர்.