Begin typing your search above and press return to search.
சிவகங்கை மாவட்டத்தில் நாளை ஆன் லைன் மூலம் விவசாயிகளின் குறை தீர்க்கும் கூட்டம் ஆட்சியர் தகவல்
சிவகங்கை மாவட்டத்தில் நாளை ஆன் லைன் மூலம் விவசாயிகளின் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறும் என ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
HIGHLIGHTS
சிவகங்கை மாவட்டத்தில், கொரோனா பரவல் காரணமாக மக்கள் குறை தீர்க்கும் கூட்டம், மற்றும் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடத்தப்படாமல் உள்ளது.
தற்போது கொரோனா தொற்று சற்று குறைந்து உள்ளதால், அரசு தளவுகளை அறிவித்துள்ளது. இந்நிலையில், ஆன்லைனில் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
அதன்டி, நாளை (ஜூலை 23 ) காலை 10:30 மணிக்கு ஆன்லைன் மூலமாக விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் அந்தந்த பகுதியில் உள்ள வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்களில் நடக்கவுள்ளது.
விவசாயிகள் தங்கள் குறைகளை தெரிவித்து தீர்வு காணலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.