முறையான அறிவிப்பு இல்லாமல் மூன்று மடங்கு மின் கட்டணம்? - வேதனையில் சிவகங்கை பொதுமக்கள்
கடந்த ௨௦௧௯ ம் ஆண்டு மின் கட்டணம் கட்ட சொல்வதால் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளார்கள்.
சிவகங்கை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் மின் கட்டணம் செலுத்தும் சேவை மையம் உள்ளது இங்கு சிவகங்கை, காஞ்சிரங்கால், மலம்பட்டி, வாணியங்குடி, உள்ளிட்ட பகுதி மக்கள் இங்கு தான் மின்கட்டணம் செலுத்துகிறார்கள். இங்கு கடந்த மே மாதம் மின் கட்டணம் செலுத்த ஏராளமானோர் சேவை மையத்திற்கு வந்தனர் அவர்கள் மின் கட்டணம் செலுத்த செல்லும்போது மின்வாரிய ஊழியர்கள் 2019ஆண்டிற்கான மின் கட்டணம் செலுத்துமாறு தெரிவித்துள்ளனர். ஆனால் மின் கட்டணம் செலுத்த வந்தவர்கள் கடைசியாக செலுத்திய மின்கட்டண மின் கட்டண தொகையுடன் வந்திருந்தனர். அத்தொகையை விட மூன்று மடங்கு கூடுதலாக மின் கட்டணம் செலுத்த சொன்னதால் மின் கட்டணம் செலுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர், சிலர் ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர்கள் கூறுகையில் ஊரடங்கு வேளையில் தங்களின் வாழ்வாதாரத்தை அரசு கொடுத்த நிவாரணத் தொகை மூலம் மிகவும் சிரமப்பட்டு கூலி வேலை செய்தும் தாங்கள் தற்போதைய சூழலில் வாழ்ந்து வருவதாகவும் தற்போது உள்ள சூழலில் 3 மடங்காக உயர்ந்து உள்ள மின் கட்டணத்தை செலுத்துவதில் மிகவும் சிரமமாக உள்ளதாக தெரிவித்தனர்.