/* */

தொண்டை கிழிந்தாலும் திமுகவை தோற்கடிப்பேன்-முதல்வர் இபிஎஸ்

தொண்டை கிழிந்தாலும் திமுகவை தோற்கடிப்பேன்-முதல்வர் இபிஎஸ்
X

தொண்டையே கிழிந்தாலும் திமுகவை தோற்கடிக்கும் வரை பாடுபடுவேன் என சிவகங்கையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

சிவகங்கை அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அவர் பேசும் போது, தி.மு.க., ஆட்சியில் எந்த சாதனையும் செய்தது கிடையாது. அதனால் தான் அவர்கள் சாதனையை சொல்வது இல்லை. மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால் தான் திட்டங்களை கொண்டு வர முடியும். தமிழக அரசின் திட்டங்களுக்கு மத்திய அரசின் நிதி தேவை.தி.மு.க., நாட்டு மக்களை பார்க்கவில்லை. குடும்பத்தை மட்டும் தான் பார்க்கிறது. இந்த தேர்தல் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல்.

திமுக.,வில் உள்ள பெரும்பாலானோர் அ.தி.மு.க,வினர்தான். ராஜ கண்ணப்பன் பச்சோந்தி போன்றவர். கலர் மாறுவதை போல கட்சி மாறி களம் காண்பவர்.தேர்தல் பரப்புரையில் பலஇடங்களில் பேசி தொண்டை கிழிந்தாலும் திமுக தோற்கடிக்கும் வரை தொடர்ந்து பாடுபடுவேன் என்று முதல்வர் தெரிவித்தார்.

Updated On: 27 March 2021 3:01 AM GMT

Related News