Begin typing your search above and press return to search.
முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பணம் வழங்கிய மாற்றுத்திறனாளி
அரசு அளித்த 2000 ரூபாய் பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கிய மாற்றுத்திறனாளியான அரசு ஊழியர்
HIGHLIGHTS
கொரானா பாதிப்பு இரண்டாம் நிலை அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு நிவாரணம் வழங்கி வருகிறது. தமிழக அரசு வழங்கிய இரண்டு ரூபாய் பணத்தை, அரசு ஊழியர்கள் முதலமைச்சர் நிவாரணத்திற்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் அதற்கு தான் முன்மாதிரியாக தான் விளங்க வேண்டும் என்று கருதிய சிவகங்கை மதுபான கிட்டங்கியில் இளநிலை உதவியாளராக பணிபுரியும் பாற்கடல் பலராமன் என்ற மாற்றுத்திறனாளி, தனது குடும்ப அட்டைக்கு அரசு வழங்கிய 2000 த்துடன் 3555 சேர்த்து, 5555 ரூபாய் கொரானா நிதியாக வழங்க மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டியை சந்தித்து முதலமைச்சர் நிவாரண நிதிக்காக வழங்கினார்.
இவரது செயலை மற்ற அரசு ஊழியர்கள் மற்றும் வசதி வாய்ப்பு உள்ளவர்கள் அனைவரும் பின்பற்றி முதலமைச்சர் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்பதே இவரது கோரிக்கையாக உள்ளது