Begin typing your search above and press return to search.
சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 9.57 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
சிவகங்கை மாவட்டத்தில் 9.57 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பதாக ஆட்சியர் தெரிவித்து உள்ளார்.
HIGHLIGHTS
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 9.57 இலட்சம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. சிவகங்கை மாவட்டம் முழுவதும் நேற்று 750 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
தற்போது சுகாதாரத் துறையில் 89 ஆயிரத்து 500 தடுப்பூசி இருப்பில் உள்ளது நேற்று மட்டும் 50 ஆயிரம் தடுப்பூசி இலக்கு நிர்ணயித்திருந்தோம். மாவட்டத்தில் 18வயதுக்கு மேற்பட்டவர்களில் 7 லட்சத்து 15 ஆயிரத்து 256 முதல் தடுப்பூசியும், 2 லட்சத்து 42 ஆயிரத்து 316 பேர் 2ம் தடுப்பூசியும் என மொத்தம் 9 லட்சத்து 57 ஆயிரத்து 572 தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.