Begin typing your search above and press return to search.
தனியார் பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கல்
சிவகங்கையில் அரசு பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர்கள் இணைந்து தனியார் பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்களை வழங்கினர்.
HIGHLIGHTS
கொரோன காலகட்டத்தில் தனியார் பள்ளியில் பணியாற்றும் உடற்பயிற்சி ஆசிரியர்களுக்கு சரியான முறையில் ஊதியம் பெறாமல் அவர்கள் மிகவும் சிரமத்தில் இருந்தனர்.
இந்நிலையில், சிவகங்கை மருதுபாண்டியர் அரசு மேல்நிலை கூட்ட அரங்கில் தனியார் உடற்பயிற்சி ஆசிரியர்களுக்கு அரசு பள்ளி ஆசிரியர்கள் கொரோனா நிவாரணம் வழங்கும் விழா நடைபெற்றது.
தனியார் பள்ளியில் பணியாற்றும் உடற்பயிற்சி ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் சங்கம் சார்பில், மாவட்ட செயலாளர் தலைமையில் 3500மதிப்புள்ள கொரோனா நிவாரணப் பொருட்களை 100க்கும் மேற்பட்ட தனியார் பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியர்களாக பணிபுரிபவர்களுக்கு சிவகங்கை மாவட்ட முதன்மை கலவி அலுவலர் பாலுமுத்து வழங்கினர்.