/* */

கொரானா நிவாரண நிதி கிடைக்க வில்லை: ஆட்சியர் வாகனத்தை முற்றுகையிட்ட திருநங்கைகள்

கொரனா நிவாரணநிதி கிடைக்கவில்லையெனக்கூறி சிவகங்கை மாவட்ட ஆட்சியரின் வாகனத்தை திருநங்கைகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

கொரானா நிவாரண நிதி கிடைக்க வில்லை: ஆட்சியர் வாகனத்தை முற்றுகையிட்ட திருநங்கைகள்
X

அரசின் கொரோனா நிவாரணநிதி கிடைக்கவில்லையெனக்கூறி, சிவகங்கை மாவட்ட ஆட்சியரின் வாகனத்தை திருநங்கைகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, திருப்பத்தூர், இளையான்குடி, மானாமதுரை ஆகிய பகுதிகளில், மூன்றாம் பாலினத்தவர் 622 பேர் உள்ளனர். இவர்களுக்கும், கொரோனா நிவாரண நிதி ரூ.2000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

ஆனால், பெயரளவில் சிலருக்கு மட்டும் நிவாரண நிதி வழங்கி விட்டு, மற்றவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் நிவாரணநிதி வழங்க வில்லை என்று கூறி, இன்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வந்த வாகனத்தை முற்றுகையிட்டு திருநங்கைகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கு வந்த காவல்துறையினர் அவர்களை கலைந்து போக அறிவுறுத்தினர். கடந்த 2 மாதங்களாக தினமும் வந்து அலைந்து கொண்டிருப்பதாகவும் காலையிலிருந்து சாப்பிடாமல் கூட காத்திருப்பதாகவும், காவல் துறையினரிடம் திருநங்கைகள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

Updated On: 26 July 2021 10:58 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    குறைந்த செலவில் பூச்சிக்கட்டுப்பாடு..! மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி..! ...
  2. ஈரோடு
    அந்தியூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து 10ம் வகுப்பு மாணவன்...
  3. தென்காசி
    மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
  4. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவில் அசத்திய மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..!
  5. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
  6. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  7. குமாரபாளையம்
    கத்தேரி பிரிவில் விளையாட்டு மைதானம், அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைக்க...
  8. ஈரோடு
    ஈரோடு: தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பரிதாப உயிரிழப்பு
  9. காஞ்சிபுரம்
    அதிகளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஆண்கள்..!
  10. காஞ்சிபுரம்
    12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!