/* */

சிவகங்கையில் கொரோனா பரவல் 7.3 சதவீதமாக அதிகரிப்பு: சுகாதாரத் துறை தகவல்

சிவகங்கையில் கொரோனா பரவல் 7.3 சதவீதமாக அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

சிவகங்கையில் கொரோனா பரவல் 7.3 சதவீதமாக அதிகரிப்பு: சுகாதாரத் துறை தகவல்
X

பைல் படம்.

கொரோனா பரவலை தடுக்க முககவசம் உயிர் கவசம் என்பதை பொதுமக்கள் உணர வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் 2வது கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில் தற்போது மாவட்டத்தில் மூன்று நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வரும் வண்ணம் உள்ளது.

குறிப்பாக சிவகங்கை, சிங்கம்புணரி, தேவகோட்டை, காரைக்குடி, திருப்பத்தூர் மானாமதுரை, திருப்புவனம், காளையார்கோவில் ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

சிவகங்கையில் கொரோனா தொற்று பரவல் 7.3 சதவீதமாக அதிகரித்துள்ளது.1043 பேருக்கு பரிசோதனை செய்ததில் 80 பேருக்கு தோற்றது உறுதியானது. மாவட்டத்தில் இதுவரை 21ஆயிரத்தி 897 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது சிகிச்சைக்குப் பின் 20 ஆயிரத்து 674 பேர் குணமடைந்துள்ளனர்.

மாவட்டத்தில் இதுவரை 213 பேர் உயிரிழந்துள்ளனர் கடந்த ஐந்தாம் தேதி பரிசோதனை செய்ததில் 1194 பேரில் 10 பேர் தொற்று உறுதியானது. தற்போது நேற்று பரிசோதனையில் 1043 பேருக்கு 80 பேர் தொற்று உறுதியாகிறது. கடந்த 13 நாட்களில் 100 சதவீதம் 0.8 லிருந்து 7. 3 ஆக அதிகரித்துள்ளது .

தொடர்ந்து மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் முக கவசம் அணிந்து இருந்தால் மட்டுமே பரவலை கட்டுக்குள் கொண்டுவர முடியும். இதனைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டிய கடமை மக்களிடம் உள்ளது. என்பதை அறிந்து தேவையின்றி வெளியில் செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும் என சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 21 Jan 2022 4:01 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  2. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  3. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  4. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  6. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  7. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  8. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்