/* */

சிவகங்கை பேருந்து நிலையத்தில் பேருந்து மோதி நிழற்கூரை தூண் சேதம்

சிவகங்கை பேருந்து நிலையத்தில் பஸ் மோதி நிழற்கூரை தூண் சேதமடைந்ததால் மேற்கூரை பணிகளை முடிக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

சிவகங்கை பேருந்து நிலையத்தில் பேருந்து மோதி நிழற்கூரை தூண் சேதம்
X

பேருந்து மோதியதில் சேதமடைந்த இரும்புத்தூண்.

சிவகங்கை பேருந்து நிலையத்தில் மதுரை-மானாமதுரை செல்லும் பஸ்கள் நிறுத்தும் இடத்தில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் எம்எல்ஏ தொகுதி நிதியிலிருந்து நிழற்கூரை அமைப்பதற்காக ரூ.70 லட்சம் ஒதுக்கீடு செய்தார்.

இதன்படி, பேருந்துகள் நிழலில் நின்று செல்ல வழிவகை செய்வதாக தெரிவித்தனர். இதற்காக நல்ல நிலையில் இருந்த காங்கிரீட் தளத்தை உடைத்து சேதப்படுத்தினர். பின்னர் தூண்கள் அமைத்து பல மாதங்களாகியும் கூரை, காங்கிரீட் தளம் அமைத்தல் போன்ற எந்த பணிகளும் நடக்கவில்லை.

இதனால், கோடை வெயிலின்போது பேருந்து நிலைய வளாகம் புழுதியைக் கிளப்பும் இடமாகவும், மழைக்காலங்களில் சகதி காடாக காட்சி அளிக்கிறது.

இந்நிலையில் அரசு பஸ் ஒன்று மோதியதில் காங்கிரீட் தூண்களும், இரும்பு தூண்களும் சேதமானது. இனிவரும் காலங்களில் பெரிய தூண்களும் சேதம் ஆவதற்கு முன்னரே மேற்கூரையை முழுமைபடுத்த நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Updated On: 18 Aug 2021 11:08 AM GMT

Related News

Latest News

  1. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  2. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்
  3. இந்தியா
    ஐஏஎஸ், ஐபிஎஸ் படிப்பிற்கு மாணவர்களை தூண்டிய திரைப்படம் பற்றி
  4. சேலம்
    சேலம் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி வேட்புமனு ஏற்பு
  5. தேனி
    பல மணி நேர பரிசீலனைக்கு பிறகு டிடிவி தினகரனின் வேட்பு மனு ஏற்பு
  6. அரசியல்
    தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர்: அமித்ஷா கடந்த கால பேச்சின் பின்னணி
  7. அரசியல்
    அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பு: இது ஆரோக்கியமான அரசியலுக்கு அறிகுறி
  8. அரசியல்
    ‘ரூ.1000 கிடைக்கவில்லை’தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சரிடம் முறையிட்ட...
  9. கோவை மாநகர்
    கோவை மாவட்ட ஆட்சியரை கண்டித்து நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்..!
  10. குமாரபாளையம்
    பள்ளிபாளையம் அ.தி.மு.க. தேர்தல் பணிமனை திறப்பு..!