Begin typing your search above and press return to search.
மயான சுற்றுவேலி உடைப்பு: நடவடிக்கை எடுக்கக்கோரி சிவகங்கை ஆட்சியரிடம் மனு
தபசுகுடி கிராமத்தில் மயான சுற்று வேலியை சிதைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, சிவகங்கை ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.
HIGHLIGHTS
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியம் காஞ்சிப் பட்டி ஊராட்சி தபசுகுடி கிராமத்தில் பொது மயானம் உள்ளது. இதை சுற்றிலும் கம்பி வேலி போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அடையாளம் தெரியாத சிலர், பொது மயானத்திற்கு போடப்பட்டிருந்த கம்பிவேலையை அடித்து நொறுக்கி சேதம் செய்துள்ளனர். இது, அப்பகுதி மக்களிடையே, அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில், மின் மயான வேலிகளை சேதப்படுத்தியோர் மீது, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்ய வேண்டும் என்று, தபசுகுடி கிராமத்தினர், சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் மதுசூதன ரெட்டியிடம் மனு அளித்துள்ளனர்.