/* */

பூவந்தி அருகே நின்ற லாரி மீது பைக் மோதி விபத்து: ஆயுதப்படை காவலர் உயிரிழப்பு

திருப்புவனத்தை அடுத்த பூவந்தி அருகே நின்ற லாரி மீது பைக் மோதி உசிலம்பட்டியைச் சேர்ந்த ஆயுதப்படைக் காவலர் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

பூவந்தி அருகே நின்ற லாரி மீது பைக் மோதி விபத்து: ஆயுதப்படை காவலர் உயிரிழப்பு
X

விபத்தில் உயிரிழந்த ஆயுதப்படை காவலர் அலெக்ஸ்பாண்டியன்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த பூவந்தி அருகே நின்ற லாரி மீது பைக் மோதி உசிலம்பட்டியைச் சேர்ந்த ஆயுதப்படைக் காவலர் பலியானார்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் அலெக்ஸ்பாண்டியன் (34). இவர் சிவகங்கை ஆயுதப்படை பிரிவில் காவலராக வேலை பார்த்து வந்தார். தனது பைக்கில் சிவகங்கையில் இருந்து புறப்பட்டு சொந்த ஊரான உசிலம்பட்டிக்கு சென்று கொண்டிருந்தார். பூவந்தி அருகே அரசலூர் சமத்துவபுரம் பகுதியில் சென்றபோது சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது பைக் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், பலத்த காயமடைந்த காவலர் அலெக்ஸ்பாண்டியன ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துலமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இந்த விபத்து சம்பவம் குறித்து பூவந்தி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 24 Feb 2022 7:46 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்