/* */

மக்கள் அதிகாரம் நிர்வாகிமீது தாக்குதல்: காவல் ஆய்வாளர் மீது ஆட்சியரிடம் புகார்

மக்கள் அதிகாரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சரவணனை தாக்கிய காவல் ஆய்வாளர் மீது ஆட்சியரிடம் புகார் மனு

HIGHLIGHTS

மக்கள் அதிகாரம் நிர்வாகிமீது தாக்குதல்:  காவல் ஆய்வாளர் மீது  ஆட்சியரிடம் புகார்
X

தாக்குதல் நடத்திய காவல்துறைமீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த மக்கள்அதிகாரம் அமைப்பினர், பொதுமக்கள்

மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளரை தாக்கிய காவல் ஆய்வாளர் மீது, கொலை முயற்சி வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுத்திட மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே நற்புதம் கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் தலித் மக்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதுகுறித்து வருவாய் கோட்டாட்சியர் முத்துகழுவன் வழிகாட்டுதலின் படி, காளையார்கோவில் காவல் நிலையத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் மூலம் புகார் மனு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், மக்கள் அதிகாரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சரவணனை, விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு வரவழைத்த காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் காவலர்கள் நடத்தியதில் பலத்த காயமடைந்த சரவணன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டது மற்றும் கொலைவெறி தாக்குதல் நடத்திய காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் காவலர்கள் மீதும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் அதிகாரம் மற்றும் நற்புதம் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

Updated On: 20 Sep 2021 6:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி