Begin typing your search above and press return to search.
ரூ.62 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பறிமுதல்
சிவகங்கை அருகே தேர்தல் கண்காணிப்பு குழுவினரின் வாகன சோதனையின் போது மோட்டார்பைக்கில் உரிய ஆவணமின்றி எடுத்து சென்ற ரூ.62 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
சிவகங்கை அருகே தாசில்தார் மைலாவதி தலைமையிலான நிலையான தேர்தல் கண்காணிப்பு குழுவினர் இன்று தொண்டி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது கீழக்கண்டனி கிராமத்தை சேர்ந்த திருக்குமார் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் பைக்கை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் சுமார் ரூ.62 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் உரிய ஆவணமின்றி எடுத்து வரப்பட்டது தெரிய வரவே அதனை பறிமுதல் செய்ததுடன் சிவகங்கை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.