/* */

சிவகங்கை அருகே ஒக்கூரில் நடந்த சாலை விபத்தில் 2 இளைஞர்கள் பலி

சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் அருகே நடந்த சாலை விபத்தில் மருது பாண்டியர் விழாவிற்கு சென்ற இருவர் உயிரிழந்தனர்.

HIGHLIGHTS

சிவகங்கை அருகே ஒக்கூரில் நடந்த சாலை விபத்தில் 2 இளைஞர்கள் பலி
X

சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் அருகே நடந்த சாலை விபத்தில்  இரண்டு இளைஞர்கள் பலியானார்கள்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நடைபெறும் மருதுபாண்டியர்களின் நினைவு தினத்தில் பங்கேற்க,மானாமதுரை சேர்ந்த அஜித் பாரதி முருகானந்தம், ராஜேஸ் ஆகிய மூவரும் இருசக்கர வாகனத்தில் திருப்பத்தூரை நோக்கி வந்துள்ளனர்.அப்போது இருசக்கர வாகனத்தில் சாசகம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மூவரும்,ஒக்கூர் அருகே வந்த போது திருச்சியிலிருந்து சிவகங்கை நோக்கி வந்த அரசு பேருந்தில் மோதியதில் அஜித் பாரதி (18) முருகானந்தம் (19) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

தகவலறிந்த மதகுபட்டி காவல் நிலையத்தினர்,விபத்தில் பலியான இருவரது உடலையும் கைப்பற்றி, சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.படுகாயமடைந்த ராஜேஸ் சிகிச்சைக்காக சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மதகுபட்டி காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 24 Oct 2021 11:07 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    வாக்குப்பதிவு மையங்களில் நேரில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்
  3. ஈரோடு
    மகாவீர் ஜெயந்தி: ஈரோடு மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்
  4. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 78.16 சதவீத வாக்குப்பதிவு: முழு விபரம்...
  5. திருவண்ணாமலை
    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்...
  6. ஆரணி
    ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 73.77 சதவீத வாக்குப்பதிவு
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 73.35 சதவீத வாக்குப்பதிவு
  8. லைஃப்ஸ்டைல்
    தேநீர் தியானம்: ஜப்பானின் அமைதிக்கான ரகசியம்
  9. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  10. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு