/* */

காளையார்கோவில்: ஆசிரியர் வீட்டில் 150 பவுன் நகை, ரூ.6 லட்சம் திருட்டு

காளையார்கோவில் வசந்தம் நகரில், ஆசிரியரின் வீட்டில் 150 சவரன் நகை, 6 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

HIGHLIGHTS

காளையார்கோவில்: ஆசிரியர் வீட்டில் 150 பவுன் நகை, ரூ.6 லட்சம் திருட்டு
X

திருடு நடந்த வீட்டில் விசாரணை மேற்கொண்ட போலீசார். 

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில், வசந்தம் நகரில் வசித்து வரும் வேதமுத்து மகன் ஜேசுதாஸ் (44 ). இவர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஆரோக்கிய ரோஸி, இவரும் அரசு பள்ளி ஆசிரியர்.

இருவரும், இன்று காலை வழக்கம் போல் பணிக்கு பள்ளிக்கு சென்றுவிட்டு, மாலையில் வீடு திரும்பினர். அப்போது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கணவன்,மனைவி இருவரும், வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது மர்ம நபர்கள் பீரோவை உடைத்து 150 சவரன் நகை, 6 லட்சம் ரூபாய் ரொக்கப்பணத்தையும் திருடிச் சென்றது தெரியவந்தது.

உடனடியாக, திருட்டு சம்பவம் குறித்து காளையார்கோவில் காவல்துறைக்கு, ஜேசுதாஸ் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், கைரேகை நிபுணர் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம், காளையார்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 14 Sep 2021 3:01 PM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  2. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  3. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்
  4. இந்தியா
    ஐஏஎஸ், ஐபிஎஸ் படிப்பிற்கு மாணவர்களை தூண்டிய திரைப்படம் பற்றி
  5. சேலம்
    சேலம் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி வேட்புமனு ஏற்பு
  6. தேனி
    பல மணி நேர பரிசீலனைக்கு பிறகு டிடிவி தினகரனின் வேட்பு மனு ஏற்பு
  7. அரசியல்
    தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர்: அமித்ஷா கடந்த கால பேச்சின் பின்னணி
  8. அரசியல்
    அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பு: இது ஆரோக்கியமான அரசியலுக்கு அறிகுறி
  9. அரசியல்
    ‘ரூ.1000 கிடைக்கவில்லை’தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சரிடம் முறையிட்ட...
  10. கோவை மாநகர்
    கோவை மாவட்ட ஆட்சியரை கண்டித்து நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்..!