/* */

மோதிரத்தை விழுங்கிய குழந்தை: எண்டோஸ்கோபி மூலம் உணவு குழாயில் இருந்த மோதிரத்தை அகற்றியது மருத்துவக் குழு.

சிவகங்கையில் குழந்தையின் உணவுக்குழாயில் சிக்கியிருந்த மோதிரத்தை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை டாக்டர்கள் எண்டோஸ்கோபி சிகிச்சை மூலம் அகற்றினர்.

HIGHLIGHTS

சிவகங்கையில், குழந்தையின் உணவுக்குழலில் சிக்கியிருந்த மோதிரத்தை நான்கு பேர் கொண்ட மருத்துவக்குழுவினர் மயக்க மருந்து கொடுத்து எண்டோஸ்கோபி சிகிச்சை மூலம் மோதிரத்தை அகற்றினர்.

சிவகங்கை மாவட்டம் சண்முகராஜா தெருவை சேர்ந்த ராம்பிரசாத் - நிரஞ்சனா தம்பதிகளின் இரண்டரை வயது குழந்தை, நேற்று முன்தினம் விளையாடிக் கொண்டிருந்தபோது, தன் கையில் வைத்திருந்த 1/2 சவரன் மோதிரத்தை விழுங்கியுள்ளது. குழந்தை வாந்தி எடுத்தும்,உணவு உட்கொள்ள மறுத்ததை அடுத்தும் ,பெற்றோர்கள் உடனடியாக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் குழந்தைக்கு நுண் கதிர் படம் எடுத்துப் பார்த்த போது, உணவுக்குழாயின் மேல்பகுதியில், மோதிரம் ஒன்று சிக்கி இருப்பது தெரியவந்தது.இதனையடுத்து, காது, மூக்கு, தொண்டை துறை தலைவர் நாக சுப்பிரமணியன் தலைமையிலான நான்கு பேர் கொண்ட மருத்துவர் குழு குழந்தைக்கு மயக்க மருந்து செலுத்தி எண்டாஸ்கோபி சிகிச்சை மூலம் மோதிரத்தை அகற்றினர். சிகிச்சைக்கு பின் குழந்தை எந்த பாதிப்பும் இல்லாமல் நல்ல நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.


Updated On: 30 Jun 2021 12:05 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி