காளையார்கோவில் பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதி இல்லாததால் பயணிகள் அவதி
காளையார்கோவில் பேருந்து நிறுத்தத்தில் குடிநீர் வசதி இல்லாததால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
HIGHLIGHTS
காளையார்கோவில் பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதி இல்லாமல் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் பேருந்து நிலையத்திற்கு பல வெளியூர் மற்றும் சுற்றுக்கிராமங்களில் இருந்தும் தினமும் 100க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன, தினமும் பல ஆயிரம் பொதுமக்கள் இங்கு வந்து செல்கின்றனர்,பல ஆண்டுகளுக்கு முன் ஊராட்சி நிர்வாகம் சார்பில் போர்வெல் அமைத்து பேருந்து நிலையத்தில் குடிநீர் வழங்கி வந்தனர் இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் மின் மோட்டார் பழுதடைந்ததால் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது. தற்போது வெளியூர்களில் இருந்து வரும் பயணிகள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். கடைகளில் விற்பனை செய்யும் தண்ணீர் பாட்டிலை வாங்கி குடிக்கின்றனர், ஊராட்சி நிர்வாகம் பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.