Begin typing your search above and press return to search.
தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு ஆலோசனை
சிவகங்கையில் சட்டமன்ற தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள மண்டல அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில், வரும் சட்டமன்ற தேர்தலில் மானாமதுரை, சிவகங்கை ஆகிய தொகுதிகளில் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள மண்டல அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் சிவகங்கை கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான மண்டல அலுவலர்கள் பங்கேற்ற நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கு முன் கடைபிடிக்க வேண்டிய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் தேர்தல் அன்று கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்கள் மற்றும் தேர்தலுக்கு பிந்தைய வழிகாட்டுதல்கள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் எடுத்துரைத்ததுடன் பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினர். இதில் மண்டல அதிகாரிகளுக்கு கலெக்டரும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.