தேர்தல் விழிப்புணர்வு குறும்படம்
நவீன எல்.இ.டி வாகனம் மூலம் தேர்தல் விழிப்புணர்வு குறும்படம். ஆட்சியர் கொடியசைத்து துவக்கிவைப்பு.
HIGHLIGHTS
சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் வாக்காளர்களிடம் தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தும்விதமாக நவீன எல்.இ.டி வாகனம் மூலம் குறும்படம் ஒளிபரப்பு செய்யும் நிகழ்வை ஆட்சியர் கொடியசைத்து துவக்கிவைத்தார்.
சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து வாக்காளர்கள் தங்களது வாக்குகளை தவறாமல் பதிவு செய்யவும், வாக்களிக்கும்போது ஏற்படும் குளறுபடிகளை தவிர்க்கவும் தேர்தல் ஆணையத்தின் மூல பல்வேறு குறும்படங்கள் ஒளிபரப்புவது வழக்கம். அதனடிப்படையில் சிவகங்கை பேருந்து நிலையம் எதிரே நவீன எல்.இ.டி வாகனம் மூலம் தேர்தல் விழிப்புணர்வு குறும்படங்களை கிராமம், கிராமமாக சென்று ஓளிபரப்பும் நிகழ்வை ஆட்சியர் மதுசூதன் ரெட்டி கொடியசைத்து துவக்கி வைத்ததுடன் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை அங்கிருந்த பொதுமக்களுக்கு வழங்கினார். அதனை தொடர்ந்து பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க அரண்மனை வாசல் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மாதிரி வாக்கு சாவடியையும் துவக்கிவைத்து பொதுமக்களை மாதிரி வாக்குகள் பதிவு செய்யவும் செய்தனர். இந்த நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.