/* */

முரசொலி & தினகரன் நாளிதழ்களை அனைத்து நூலகங்களும் கட்டாயம் வாங்க வேண்டுமென்று அரசாணை போட்டாச்சு

முரசொலி & தினகரன் நாளிதழ்களை அனைத்து நூலகங்களும் கட்டாயம் வாங்க வேண்டுமென்று அரசாணை போட்டாச்சு
X

முரசொலி & தினகரன் நாளிதழ்களை அனைத்து நூலகங்களும் கட்டாயம் வாங்க வேண்டுமென்று அரசாணை போட்டாச்சு


சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சி நூலகங்களிலும் முரசொலி பத்திரிக்கை உட்பட மூன்று தினசரி நாளிதழ் வாங்கி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும் என சிவகங்கை மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குனர் சண்முகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் 27-05- 2021 ஆம் தேதி நடைபெற்ற காணொளிக்காட்சி அறிவுரையின்படி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சி நூலகத்திற்கும் 01-06-2021 முதல் தினமும் மூன்று தினசரி நாளிதழ்கள் வாங்கி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்காக முரசொலி நாளிதழ் ஒரு வருட சந்தா ஒரு நூலகத்திற்கு ஆயிரத்து 800 ரூபாயை முரசொலி சென்னை என்ற முகவரிக்கு வங்கி வரைவோலையாக பெற்று இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மற்ற இரண்டு நாளிதழ்களை உள்ளூர் முகவர்களிடமிருந்து பெற்று பயன்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறது. இதற்கான தொகையை உடனடியாக வழங்க வேண்டி உள்ளதால் ஊராட்சி ஒன்றிய பொது நிதி கணக்கு எண் ஒன்றிலிருந்து இவ்வலுகத்திற்கு அனுப்பி வைக்கவும், மேலும் இத்தொகை ஊராட்சி கணக்கில் இருந்து பெற்று ஈடுசெய்ய அறிவுறுத்தப்படுகிறது என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Updated On: 7 Jun 2021 3:22 PM GMT

Related News