/* */

வேன்-பைக் மோதல்: 2 பேர் பலி- படுகாயமடைந்த ஒருவர்அரசு மருத்துவமனையில் அனுமதி

தொண்டியிலிருந்து மீன் ஏற்றிவந்த வாகனமும், இருசக்கர வாகனமும் நேருக்குநேர் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்

HIGHLIGHTS

வேன்-பைக் மோதல்: 2 பேர்  பலி- படுகாயமடைந்த ஒருவர்அரசு மருத்துவமனையில் அனுமதி
X

மீன் ஏற்றி வந்த வாகனம் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் பலியாகினர். ஒருவர் படுகாயத்துடன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே புளியால் கிராமத்தில், இராமநாதபுரம்- காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் தொண்டியிலிருந்து மீன் ஏற்றிவந்த வாகனமும், இருசக்கர வாகனமும் நேருக்குநேர் மோதிக் கொண்ட விபத்தில் மீன் ஏற்றிவந்த வாகனத்தை ஓட்டி வந்த தேவகோட்டை, மாந்தோப்பு வீதியைச் சேர்ந்த சரவணன் என்பவரும் இருசக்கர வாகனத்தில் வந்த சாணான்வயல் கிராமத்தைச் சேர்ந்த முருகன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இருசக்கர வாகனத்தில் பின்புறம் அமர்ந்து வந்த கண்ணதாசன் என்பவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் , அருகிலிருந்தோர் தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்த தேவகோட்டை தாலுகா காவல் துறையினர் விபத்தில் பலியானவர்கள். உடல்களை கைப்பற்றி, தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



Updated On: 12 Jan 2022 8:59 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    வெப்ப அலை; பகல் நேரத்தில் வெளியில் வர வேண்டாம் என கலெக்டர் வேண்டுகோள்
  2. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் குப்பைகள் உடனுக்குடன் அகற்றம்; கலெக்டர் ஆய்வு
  3. பொன்னேரி
    குண்ணமஞ்சேரி முத்துமாரியம்மன் கோவில் பால்குட ஊர்வலம்
  4. திருவள்ளூர்
    திருவள்ளூர்; ஸ்ரீவைத்தி வீரராகவ பெருமாள் கோவிலில் தீர்த்தவாரி...
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  6. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோவிலில் வசந்த உற்சவத்தின் நிறைவாக மன்மத தகனம்
  7. சினிமா
    கூலி படத்துக்காக மரணம் வரை சென்று மீண்டு வந்த நடிகர் அமிதாப் பச்சன்!
  8. இந்தியா
    இயற்கை கடும் எச்சரிக்கை! வறட்சியை நோக்கிச் செல்லும் இந்தியா
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி விழா; இலட்சக்கணக்கில் குவிந்த...
  10. இந்தியா
    இன்னும் 5 நாள் வெளியே தலை காட்டாதீங்க...