/* */

காரைக்குடி செல்போன் கோபுரத்தில் திடீர் தீ: பெரும் தீவிபத்து தவிர்ப்பு

காரைக்குடி செல்போன் கோபுரத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டாதால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

காரைக்குடி செல்போன் கோபுரத்தில் திடீர் தீ:  பெரும் தீவிபத்து தவிர்ப்பு
X
தீப்பிடித்து எரிந்த செல்போன் கோபுரம்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பழைய அரசு மருத்துவமனை பின்புறம் பட்டுக்கோட்டையார் வீதியில் தனியாருக்குச் சொந்தமான செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருந்து வரும் நிலையில், சுமார் 90 அடி நீளத்தில் அமைந்துள்ள செல்போன் கோபுரத்தின் உச்சியில் மின்னணு சாதனங்கள் பொருத்தப்பட்டிருந்த பெட்டி திடீரென தீப்பற்றி எரிந்தது.

இதனைக் கண்ட குடியிருப்புவாசிகள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.

செல்போன் கோபுரத்தில் இருந்த மின்னணு சாதனங்கள் மட்டும் சேதமாகி பெரும் விபத்து தவிர்க்கப்பட்ட நிலையில், தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 7 Nov 2021 3:50 AM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி
    இலங்கை அகதிகள் முகாமிலிருந்து முதல் வாக்காளர்! போராடி பெற்ற வாக்காளர்...
  2. இந்தியா
    மோடி ஆட்சியிலா சீனா, இந்தியாவை ஆக்கிரமித்தது..?
  3. இந்தியா
    மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேகதாது திட்டத்தை அமல்! கர்நாடக...
  4. உலகம்
    உலகின் சிறந்த பாதுகாப்பு : அசத்தியது இஸ்ரேல்...!
  5. தமிழ்நாடு
    தென் மாவட்டங்களுக்கு தேர்தல் கால சிறப்பு ரயில்கள்..!
  6. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  7. நாமக்கல்
    போதமலைக்கு தலைமைச்சுமையாக வாக்கு இயந்திரங்களுடன் அதிகாரிகள்
  8. லைஃப்ஸ்டைல்
    கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை.. பொறுப்பான வாழ்க்கைக்கு...
  9. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 22 கன அடியாக சரிவு
  10. லைஃப்ஸ்டைல்
    கோடையில் வெறும் வயிற்றில் அருந்தும் அற்புத அஜ்வைன் தேநீர்