/* */

கொலை வழக்கில் ஜாமினில் வந்தவர் கொலை: திருவேகம்பத்தூர் போலீசார் விசாரணை

ஒரு கொலை வழக்கில் ராஜாங்கம் 4 -ஆவது குற்றவாளியாக சிறை சென்று தற்போது ஜாமீனில் வந்தபோது கொலை செய்யப்பட்டுள்ளார்

HIGHLIGHTS

கொலை வழக்கில் ஜாமினில் வந்தவர் கொலை: திருவேகம்பத்தூர் போலீசார் விசாரணை
X

காரைக்குடி அருகே கொலை வழக்கில் ஜாமினில் வந்தவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து திருவேகம்பத்தூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் ,தேவகோட்டை அருகே திருமணவயல் கிராமத்தில் உள்ள உணவகத்தில், இரவு சாப்பாடு பார்சல் வாங்குவதற்காக சிறுவத்தி கிராமத்தை சேர்ந்த ராஜாங்கம் (25)என்பவர் வந்துள்ளார் அப்போது அங்கு பாவனக்கோட்டை கிராமத்தை சேர்ந்த பிரபு (28), கோட்டூர் கிராமத்தை மணி (25) இவரும், ராஜாங்கத்திடம் தகறாறு செய்துள்ளனர். அப்போது பிரபு , மணி இருவரும் கத்தியால் குத்தியதில் ராஜாங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொலை நடந்த இடத்திற்கு தேவகோட்டை துணை கண்காணிப்பாளர் ரமேஷ் வந்து விசாரணை நடத்தினார். போலீஸார் ராஜாங்கத்தின் உடலை கைப்பற்றி உடல்கூராய்வுக்காக தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

கடந்த ஜூன் மாதம் தேவகோட்டையில் இருந்து தனது கிராமமான சிறுவத்திக்கு இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது சிவா என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் ராஜாங்கம் 4 -ஆவது குற்றவாளியாக சிறை சென்று தற்போது ஜாமீனில் வந்த நிலையில், தற்போது கொலை செய்யப்பட்டார். ஜாமீனில் வந்தவர் கொலை செய்யப்பட்டது பழிக்கு பழியாக நடந்த கொலையா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் இந்நிலையில், குற்றவாளி கைது செய்ய வேண்டும் உயிரிழந்த குடும்பந்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர் .

Updated On: 22 Oct 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  2. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  3. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  4. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  5. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  6. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  7. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  8. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    பொடுகுக்கு இயற்கையான தீர்வுகள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  10. ஆன்மீகம்
    திருப்புகழை பாட பாட வாழ்க்கை மணக்கும் - திருப்புகழ் பெருமையை...