/* */

தெலங்கானாவில் ரூ.5 கோடி மோசடி புகார்: அஇமூமுக மாநில நிர்வாகி கைது

கடந்த 2018 ஆண்டு 5 கோடியை, டாக்குமெண்ட் சார்ஜ் என்று வாங்கி ஏமாற்றியதாக அளிக்கப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

தெலங்கானாவில் ரூ.5 கோடி மோசடி  புகார்: அஇமூமுக மாநில நிர்வாகி  கைது
X

தெலங்கானாவில் ரூ. 5 கோடி மோசடி செய்த வழக்கில், அ.தி.மு.க கூட்டணியில் சட்டமன்ற தேர்தலில் திருச்சுழி தொகுதியில் போட்டியிட்ட ராஜசேகர் (எஸ்.ஆர். தேவர்) என்பவரை தெலங்கானா போலீசார் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்த ஐந்து மாவட்ட விவசாய சங்கத் தலைவர் மற்றும் அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற கழக பொதுச் செயலாளராக உள்ள எஸ்.ஆர். தேவர் என்ற ராஜசேகர் என்பவரை, தெலங்கானாவில் இருந்து வந்த 5 பேர் கொண்ட போலீசார் நேற்று கைது செய்தனர். இவரை, காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், விசாரணைக்காக தெலங்கானா அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். தெலங்கானாவில் உள்ள காமிநேனி மருத்துவமனைக்கு, ரூ. 300 கோடி கடன் வாங்கித் தருவதாக கூறி, கடந்த 2018 ஆண்டு டாக்குமெண்ட் சார்ஜ் என்று ரூ.5 கோடியை வாங்கினாராம். இந்நிலையில், கடன் வாங்கி தராமல் ஏமாற்றி விட்டதாக, கிருஷ்ணபிரசாத் (எ) லெட்சுமிநாரயணன் என்பவர் அளித்த புகாரின் பேரில் தற்போது கைது செய்யப்பட்டார்.

Updated On: 1 Sep 2021 5:08 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதல், சர்வதேச பொதுமொழி..! ஆயினும் அது புதுமொழி..!
  2. லைஃப்ஸ்டைல்
    துக்கம் என்று வந்துவிட்டால், அக்கா வந்து முதலில் நிற்பாள்..!
  3. ஈரோடு
    ஈரோடு திமுக வேட்பாளர், தமிழக முதல்வர் சந்திப்பு!
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களின் அழகுக்கு அழகு சேர்க்கும் பாரம்பரிய ஆபரணங்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    முகம் பிரகாசமாக மின்னுவதற்கான இயற்கை வழிகள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  6. நாமக்கல்
    கோடைக்காலத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள்: 30ம் தேதி இலவச...
  7. நாமக்கல்
    வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் அன்று சம்பளத்துடன் விடுமுறை ..!
  8. லைஃப்ஸ்டைல்
    ருசியான கருவாட்டு குழம்பு செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    பாட்டி, நீங்கள் ஊட்டியது "பூவா" அல்ல, பாசம்..!
  10. ஈரோடு
    மழை பெய்ய வேண்டி ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் சிறப்பு வழிபாடு