/* */

காரைக்குடியில் மாணவர்களுக்கான உயர் சிறப்பு முகாம்: ஆட்சியர் தொடக்கம்

இம்முகாமில் கலந்து கொண்ட மாணவர்கள் கல்லூரியில் சேர்வதற்கான படிவங்களும் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது

HIGHLIGHTS

காரைக்குடியில் மாணவர்களுக்கான உயர் சிறப்பு முகாம்: ஆட்சியர் தொடக்கம்
X

காரைக்குடியில்  நடைபெற்ற “உயர்வுக்கு படி” முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தொடக்கி வைத்தார்.

காரைக்குடியில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மேல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்று உயர்கல்வியில் சேராத மாணாக்கர்களுக்கான சிறப்பு முகாமான “உயர்வுக்கு படி”முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், துவக்கி வைத்தார்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் , நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மேல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்று உயர்கல்வியில் சேராத மாணாக்கர்களுக்கான சிறப்பு முகாமான “உயர்வுக்கு படி” முகாமினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தொடக்கி வைத்து பேசியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயின்று வரும் மாணவ, மாணவியர் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் மாணவ, மாணவியர்கள் எளிதில் அறிந்து கொண்டு, பயன்பெறும் வகையில் “நான் முதல்வன்” என்ற திட்டத்தினை அறிவித்து தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். மாணாக்கர்கள் படிக்கும் போது, எதிர்காலத்தில் என்ன படிக்கலாம் என்பது பற்றிய போதுமான விழிப்புணர்வினை ஏற்படுத்தும் பொருட்டும், குறிப்பாக, கிராமப்புறங்களைச் சார்ந்த மாணாக்கர்;களுக்கு பயனுள்ள வகையிலும், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டம் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளும் வகையில், மாவட்டத்திலுள்ள அனைத்து மேல்நிலைக்கல்வி மற்றும் உயர்நிலைக்கல்வி பயின்று வரும் மாணாக்கர்களுக்கு விழிப்புணர்வுகள் ஏற்படுத்துகின்ற வகையில், பல்வேறு கருத்தரங்குகள் மற்றும் பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டுள்ளது.

தற்போது நடைபெற்ற பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வில், சிவகங்கை மாவட்டத்தை சார்ந்த மாணாக்கர்கள் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கின்ற வகையில் தங்களது பங்களிப்பை அளித்துள்ளனர். அதில் பன்னிரண்டாம் வகுப்பில் சிறப்பான பங்களிப்பினை அளித்து, தங்களது ஆர்வத்தின் அடிப்படையில், தங்களுக்கேற்ற பாடப்பிரிவினைத் தேர்ந்தெடுத்தும், சிறந்த கல்லூரியினை தேர்ந்தெடுத்தும் தங்களது உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர்.

அதில், சில மாணாக்கர்கள் உயர்கல்வியில் சேராமல் இருக்கின்றனர். அம்மாணாக்கர்களுக்கு சிறந்த வழிகாட்டு முறைகளை வழங்கி உயர் கல்விக்கான திட்டமிடலுக்கு அடிப்படையாக நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இம்முகாம் மாவட்டம் முழுவதும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இம்முகாமின் வாயிலாக பல்வேறு வழிகாட்டு முறைகள் மாணாக்கர்களுக்கு வழங்கப்படுகிறது அதில், உயர் கல்விக்கான படிப்புக்கள் மற்றும் கல்லூரிகள் ஆகியன தொடர்பாக, திறன் மிக்க பயிற்சியாளர்களைக் கொண்டு விரிவாக எடுத்துரைக்கப்படுகிறது. இம்முகாமில் கலந்து கொண்டுள்ள மாணாக்கர்களுக்கு, கல்லூரியில் சேர்வதற்கான படிவங்களும் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் ஆர்வத்தின் அடிப்படையில் உயர்கல்விக்கான பிரிவுகளை தேர்ந்தெடுத்து பயில்வதற்கு உறுதுணையாக இருந்திடல் வேண்டும். மேலும் மாணவியர்கள் உயர்கல்வி பயில்வதற்கென அரசின் சார்பில் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டமும் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதுபோன்று மாணாக்கரின் நலனை கருத்தில் கொண்டு, பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வியில் எண்ணற்ற திட்டங்கள் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு, மாணாக்கர்களின் நலன் காக்கப்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு, இது போன்ற முகாம்களை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொண்டு, உயர்கல்வியில் சிறந்து விளங்கி, தங்களது வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திக் கொள்வதற்கு இதனை அடிப்படையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் சோ.பால்துரை, உதவி இயக்குநர் (மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம்) கர்ணன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் மணிகணேஷ், ராஜலெட்சுமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இரா.சுவாமிநாதன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் இளவழகன், காரைக்குடி வட்டாட்சியர் தங்கமணி மற்றும் மாணவ மாணவியர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 5 July 2023 8:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...