/* */

வட்டாட்சியர் பெயரில் போலி இலவச வீட்டுமனை பட்டா: ஒருவர் கைது

வட்டாட்சியர் பெயரில் போலி இலவச வீட்டுமனை பட்டா கொடுத்து மோசடி செய்ததாக, ஒருவர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

வட்டாட்சியர் பெயரில் போலி இலவச வீட்டுமனை பட்டா: ஒருவர் கைது
X

கைதான ராஜவினி.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே பூங்குடியைச் சேர்ந்த ஹேமலதா, பிரேமலதா ஆகியோர், 2015-ம் ஆண்டு இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு வட்டாட்சியரிடம் மனு செய்தனர். அப்போது, துணை வட்டாட்சியருக்கு சொந்தமான காருடைய ஓட்டுநராக இருந்த பனிப்புலன் வயலைச் சேர்ந்த ராஜவினி (36) என்பவர், ஹேமலதா, பிரேமலதா ஆகியோரிடம் இலவச வீட்டுமனை பட்டா வாங்கி தருவதாகவும், ரூ.60 ஆயிரம் தருமாறும் கேட்டுள்ளார்.

இதை நம்பி இருவரும் ராஜவினியிடம் ரூ.60 ஆயிரம் கொடுத்தனர். இதையடுத்து அவர்களுக்கு அரசு முத்திரையுடன் வட்டாட்சியர் பெயரில் கையெழுத்திட்டு பட்டா கொடுத்துள்ளார். இந்நிலையில் தங்களுக்கு கொடுத்த பட்டா போலி என தெரியவந்ததை அடுத்து, ஹேமலதா, பிரேமலதா ஆகியோர், கோட்டாட்சியர் பிரபாகரனிடம் புகார் கொடுத்தனர். இதையடுத்து கோட்டாட்சியர் புகாரின் பேரில் தேவகோட்டை டவுன் எஸ்ஐ பாலகிருஷ்ணன் வழக்கு பதிந்து ராஜவினியை கைது செய்தார்.

Updated On: 26 Sep 2021 8:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?