/* */

உயிரிழந்த கோவில் மஞ்சு விரட்டு காளை; கிராமமே அஞ்சலி செலுத்தி நல்லடக்கம்

காரைக்குடி அருகே உயிரிழந்த கோவில் மஞ்சு விரட்டு காளைையை கிராமமே நல்லடக்கம் செய்தது சோகத்தை ஏற்படுத்தியது.

HIGHLIGHTS

உயிரிழந்த கோவில் மஞ்சு விரட்டு காளை; கிராமமே அஞ்சலி செலுத்தி நல்லடக்கம்
X

உயிரிழந்த காளையை அடக்க செய்ய ஊர்வலமாக எடுத்துச்செல்லும் மக்கள்.

மஞ்சுவிரட்டுக்கு பெயர் பெற்ற சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி அருகே செவரக்கோட்டை கிராமத்தில் உள்ள கருப்பர் கோயில் மஞ்சுவிரட்டு காளை வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்தது.

இதனையடுத்து, செவரக்கோட்டை கிராம மக்கள் தங்கள் வீட்டில் ஒருவர் இறந்தால் எப்படி நல்லடக்கம் செய்வார்களோ அது போல இறந்த மஞ்சு வரட்டு காளைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

காளையை பாரம்பரிய முறைப்படி கொம்பு ஊாதி, கொட்டு அடித்து இளைஞர்கள் ஆட்டம் பாட்டத்துடன் சென்று நல்லடக்கம் செய்தனர் .மஞ்சுவிரட்டு நல்லடக்க ஊர்வலத்தில் இறந்த காளையை கடவுளாக எண்ணி பெண்கள் குழவை பாடல்கள் பாடினர்.

இந்த ஊர்வலத்தில், கிராம மக்கள், குழந்தைகள், பெண்கள் மற்றும் பெரியவர்கள் என அனைவரும் கலந்துகொண்டனர். அடக்கம் செய்யும் போது குழந்தைகள், பெண்கள் சிலர் அழுது கண்ணீர் வடித்தது மஞ்சுவிரட்டு காளை மேல் உள்ள பாசத்தை கட்டியது அருகில் இருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது .

Updated On: 1 Aug 2021 8:13 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    இந்தியாவின் தேசிய பறவை மயிலை கொன்றால் எத்தனை ஆண்டு சிறைத்தண்டனை...
  2. இந்தியா
    இந்தியாவின் தேசிய விலங்கு புலிகள் ஊருக்குள் புகுவது ஏன்?
  3. கரூர்
    கரூர் எம்பி தொகுதியில் இதுவரை ரூ1.35 கோடி பணம் பரிசு பொருள் பறிமுதல்
  4. கோவை மாநகர்
    ஆரத்தி எடுத்த பெண்ணிற்கு பணம் கொடுத்தது குறித்து அண்ணாமலை விளக்கம்..!
  5. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் வாக்களிக்க நூதன வரவேற்பளித்த அரசு அதிகாரிகள்..!
  6. குமாரபாளையம்
    புனித வெள்ளியையொட்டி நடந்த சிலுவைப்பாதை..!
  7. லைஃப்ஸ்டைல்
    உளுந்துண்டு வாழ்ந்தால் வளம்காணும் உடலே..! எப்டீ? படீங்க..!
  8. நாமக்கல்
    தி.மு.க. அரசின் நலத்திட்டங்கள் பற்றி ராஜேஷ்குமார் எம்.பி. பேச்சு
  9. கோவை மாநகர்
    ஆரத்திக்கு அண்ணாமலை பணம் கொடுத்தாரா? விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு
  10. இந்தியா
    கங்கை நதி பற்றி இதுவரை தெரியாத உண்மைகள் இங்கே கட்டுரையாக...