/* */

இலங்கையின் சங்கப்படலை: தமிழர்கள் வாழ்ந்த இடத்தின் பழமையும், தொன்மையும்

தமிழர்களின் பாரம்பரிய வாழ்வியலுக்கு உதாரணமாக இலங்கையின் சங்கப்படலைகள் திகழ்கின்றன.

HIGHLIGHTS

இலங்கையின் சங்கப்படலை: தமிழர்கள் வாழ்ந்த இடத்தின் பழமையும், தொன்மையும்
X

யாழ்ப்பாணத்தில், "அளவெட்டி" என்னும் ஊரிலிருந்து "அம்பனை" என்னும் ஊருக்குப் போகும் வீதியில் சங்கப்படலையுடன் இப்போதும் காட்சியளிக்கும் வீடு.

கீழடியின் பெருமைகளை நாம் கொண்டாடி வருகின்றோம். இது மிகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த் ஒரு ஆய்வு தான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் தமிழர்களின் வாழ்வியல் கீழடியில் மட்டுமல்ல. இது போல் பல ஆயிரம் கீழடிகள் உள்ளன. அந்த அளவு தொன்மையும், பழமையும் வாய்ந்தது தமிழர்களின் பாரம்பரியம். இதற்காக ஒரு தனி அமைச்சகமே உருவாக்கலாம். நிச்சயம் முதல்வர் ஸ்டாலின் தமிழர்களின் பாரம்பரிய வாழ்வியல்முறைகளை ஆய்வு செய்து வெளியிட தனி அமைச்சர் நியமிப்பார் என நம்புவோம். இதுவரை தமிழகத்தில் மட்டும் தான் தமிழர்களின் வாழ்வியல் சிறப்பாக இருந்தது என நினை்தோம். உலகம் முழுவதும் தமிழர்கள் வாழ்ந்த இடங்களில் எல்லாம் பழமையும், பெருமையும், தொன்மையும் புதைந்து கிடக்கின்றன. இலங்கையில் தமிழர்களின் சிறப்பு என்ன என்பதை இந்த செய்தியில் காணலாம்.

இலங்கையின் வடமாகாணமான யாழ்ப்பாணத்தில், பெரும்பாலான வீடுகளைச் சுற்றிக் கிணறு, மரங்கள், பூச்செடிகளுடன் கூடிய காணிகள் காணப்படும். இவற்றைத் தாண்டியே வீட்டின் தலைவாசலை (Main Entrance) அடையலாம். வீதியிலிருந்து வீட்டுக் காணிக்குள் செல்ல உபயோகிக்கும் வாயிலை (Gate) அங்கே "படலை" என்பார்கள். வீதிகளில் செல்லும் வழிப்போக்கர்கள் சற்று ஆற, அமர இருந்து விட்டுச் செல்லும் நோக்கில், சில வீடுகளின் வாயில்களின் இரு புறமும் திண்ணைகளும், மேலே கூரையும் அமைக்கப்பட்டிருக்கும். இது "சங்கப்படலை" அல்லது "சங்கடப்படலை" எனப்படுகிறது.

ஆரம்ப காலங்களில் தென்னோலையில் பின்னிய கிடுகுகள், தடிகள் கொண்டமைக்கப்பட்ட சங்கப் படலையானது காலப்போக்கில் ஓடுகள், சீமெண்ட் கொண்டு அமைக்கப்பட்டது. சங்கப் படலையோடு மண் பானையில் தண்ணீரும், அருகே குவளையையும் வைக்கும் வழக்கமும் இருந்துள்ளது.

அங்கு நடந்த போரினாலும், பழமையை விட்டுப் புதுமையைத் தேடும் மனோபாவத்தாலும் இத்தகைய சங்கப்படலைகள் பெரும்பாலும் அழிந்து விட்டன. இப்போது அங்கொன்றும், இங்கொன்றுமாகவிருக்கும் சங்கப்படலைகள் எவ்வளவு காலத்திற்கு இருக்கப் போகின்றனவோ? முன்னோர்கள் எவ்வித பலனையும் எதிர்பாராது, மற்றவர்களின் நலன் கருதிச் செய்த பல விஷயங்களை நாம் தொடராமல் விட்டதோடு, அவர்கள் விட்டுச் சென்றவற்றைக் கூடப் பாதுகாக்க முடியாதவர்களாகவிருக்கிறோமென்பது அவமானமே !

Updated On: 16 April 2023 6:13 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  3. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  6. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  7. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  8. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  9. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?