/* */

ஏற்காட்டில் அரசு மதுபானங்களை பதுக்கி விற்பனை: தலைமறைவாக இருந்த இருவர் கைது

ஏற்காட்டில் அரசு மதுபானங்களை பதுக்கி விற்பனை மற்றும் சாராய ஊறல் போட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

ஏற்காட்டில் அரசு மதுபானங்களை பதுக்கி விற்பனை: தலைமறைவாக இருந்த இருவர் கைது
X

கைது செய்யப்பட்ட வெங்கடேசன், பூச்சி என்கிற அரபுலி.

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் கள்ளச்சந்தையில் மது விற்பனை மற்றும் கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதன்படி ஏற்காடு காவல்நிலைய போலீசார் மலைக்கிராமங்களில் அவ்வபோது அதிரடி சோதனை மேற்கொண்டு சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அவ்வாறு அரசு அனுமதியின்றி மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த நடுவூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரையும், சாராய ஊறல் போட்ட வழக்கில் குண்டூர் கிராமத்தை சேர்ந்த பூச்சி என்கிற அரபுலி என்பவரையும் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் தலைமறைவாக இருந்த இருவரையும் கைது செய்த ஏற்காடு காவல் நிலைய போலீசார் இருவரையும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 1 Feb 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  2. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  3. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  4. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  5. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  6. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி
  7. கல்வி
    அறிவை விளைவிக்கும் எழுத்து வயல், புத்தகங்கள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை ஏன் அவசியம்..?
  9. சினிமா
    கில்லி படத்துல அது ஃபேக்காம்.. தரணியே சொல்லிட்டாரு..!
  10. ஈரோடு
    ஈரோட்டில் நிழல் சண்டை செயல் முறையில் அசத்திய கராத்தே வீரர்,...