/* */

வீரபாண்டி ராஜாவின் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

மறைந்த முன்னாள் எம்எல்ஏ வீரபாண்டி ராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

HIGHLIGHTS

வீரபாண்டி ராஜாவின் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
X

மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வீரபாண்டி ராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் இளைய மகனுமாகிய வீரபாண்டி ராஜா இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்தார். 58 ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடவிருந்த வீரபாண்டி ராஜா திடீரென உயிரிழந்த சம்பவம் திமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ராஜாவின் மறைவை அடுத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் பங்கேற்ற நிகழ்வுகளை முடித்துக்கொண்டு அங்கிருந்து தனிவிமானம் மூலம் சேலம் வந்தார். பின்னர் பூலாவரியில் உள்ள வீரபாண்டி ராஜாவின் வீட்டிற்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் ராஜாவின் மனைவி மகள் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

முன்னதாக, ராஜாவின் உடலுக்கு அமைச்சர்கள் பொன்முடி, கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அன்பில் மகேஷ், சாமிநாதன், மதிவேந்தன் உள்பட திமுக நிர்வாகிகள் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் ராஜாவின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். வீரபாண்டி ராஜாவின் உடல் நாளை காலை அடக்கம் செய்யப்பட உள்ள நிலையில் தி.மு.க.,காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Updated On: 2 Oct 2021 12:15 PM GMT

Related News