/* */

பேருந்து வழித்தடத்தில் செல்ல ஓட்டுநரிடம் லஞ்சம் பெற்ற நடத்துனர் கைது

பேருந்து வழித்தடத்தில் செல்வதற்காக ஓட்டுநரிடம் லஞ்சம் பெற்ற நடத்துநரை சேலம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

பேருந்து வழித்தடத்தில் செல்ல ஓட்டுநரிடம் லஞ்சம் பெற்ற நடத்துனர் கைது
X

லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட நடத்துனர்.

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஓட்டுநராகப் பணியாற்றி வருபவர் பரமசிவம். இவர் சேலத்தில் இருந்து திருவாரூர் செல்லும் வழித்தடத்தில் செல்ல தாரமங்கலம் பணிமனை தொ.மு.ச. செயலாளரும், நடத்துனருமான குணசேகரன் என்பவர் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

இதுதொடர்பாக ஓட்டுநர் பரமசிவம் சேலம் லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் செய்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் நரேந்திரனின் ஆலோசனையின்படி, பரமசிவம் லஞ்சப் பணம் ரூ.5 ஆயிரத்தை குணசேகரனிடம் வழங்கினார்.

அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் கையும் களவுமாக குணசேகரனை கைது செய்தனர். இதுதொடர்பாக, சேலம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 11 Jan 2022 2:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  4. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  6. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  7. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  8. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  9. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  10. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?