/* */

பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க நடவடிக்கை: சேலம் மாநகராட்சி ஆணையாளர்

பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களில் சமூக இடைவெளியை முழுமையாக கடைபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க நடவடிக்கை: சேலம் மாநகராட்சி ஆணையாளர்
X

கொரோனா நோய் தொற்றை முற்றிலும் தடுத்திடும் வகையில், மக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வூட்டும் பணிகளை சேலம் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் அரசின் சேவைகளை பெறுவதற்காக அதிக அளவில் வந்து செல்லும் பொது இடங்களில் சமூக இடைவெளி கடைபிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

குறிப்பாக, நியாய விலைக்கடைகள், வருவாய் கிராம நிர்வாக அலுவலகங்கள், இ – சேவை மையங்கள், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், பத்திரப்பதிவு அலுவலகங்கள், உழவர் சந்தைகள் உள்ளிட்ட அரசு சார்ந்த இடங்களில், பொதுமக்கள் சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்கும் வகையில், 6 அடி இடைவெளியுடன் கூடிய அடையாள வட்டங்களை வரையும் பணியினை, சேலம் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

அதன் அடிப்படையில், சுகாதாரப்பணியாளர்கள் வாயிலாக நியாய விலைக்கடைகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலகங்கள் உள்ள பகுதிகளில் அடையாள வட்டங்கள் வரையப்பட்டு வருகிறது. குமாரசாமிப்பட்டி நியாய விலைக்கடை மற்றும் குமாரசாமிப்பட்டி கிராம நிர்வாக அலுவலகங்களின் முன்பாக சமூக இடைவெளிக்கான அடையாள வட்டங்கள் வரையும் பணியை மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், பார்வையிட்டார்.

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் பொதுச்சேவைகள் வழங்கும் அரசு அலுவலகப்பகுதிகள் மட்டுமின்றி, பொதுமக்கள் அதிகமாக வந்து செல்லும் காய்கறி, மீன், இறைச்சி அங்காடிகள் மற்றும் வணிக நிறுவனத்தினர், தங்களது வாடிக்கையாளர்கள் முகக்கவசங்கள் அணிந்து வருவதை உறுதி செய்வதோடு, சமூக இடைவெளிக்கான அடையாள வட்டங்களை வரைந்து முறையாக அரசின் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என, ஆணையாளர் கிறிஸ்துராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.

Updated On: 23 Jun 2021 3:13 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்