/* */

சேலத்தில் கிறிஸ்தவ மயான பிரச்சனை: இருதரப்பினரிடையே போலீசார் சமரசம்

சேலத்தில் கிறிஸ்தவ மயான பிரச்சனை தொடர்பாக இருதரப்பினரிடையே மோதல் ஏற்படாமல் போலீசார் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

HIGHLIGHTS

சேலத்தில் கிறிஸ்தவ மயான பிரச்சனை: இருதரப்பினரிடையே போலீசார் சமரசம்
X

சேலம் நான்குரோடு அருகே உள்ள கிறிஸ்தவர்களுக்கு சொந்தமான மயானம்.

சேலம் நான்குரோடு அருகே கிறிஸ்தவர்களுக்கு சொந்தமான மயானம் ஒன்று உள்ளது. 1930ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்த மயானம் கிறிஸ்தவ மக்கள் பயன்பாட்டுக்காக வழங்கப்பட்டது. பல ஆண்டு காலமாக பயன்பாடற்று புதர் மண்டி கிடந்த இந்த மயானம் தற்போது சீரமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சேலம் இரும்பாலை பகுதியைச் சேர்ந்த ஒருவரின் சடலத்தை இந்த மயானத்தில் அடக்கம் செய்வதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இதனையறிந்த கத்தோலிக்க கிறிஸ்தவர்கள், குழி தோண்ட வந்த பொக்லின் வாகனத்தை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். மேலும், மயானத்திற்கு செல்லும் வாயிலை அடைத்தனர். இதனால் கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கும், ரோமன் கிறிஸ்தவர்களுக்கும் இடையே பிரச்னை எழும் சூழல் உருவானது.
இதுகுறித்து தகவலறிந்த பள்ளப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பிரச்னைக்குரிய மயானம் கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு சொந்தமானது என்பதால் ரோமன் கிறிஸ்தவர்கள் இதை பயன்படுத்தக் கூடாது என்று ஒரு தரப்பினர் கூறினர்.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பொதுவாக கிறிஸ்தவர்களுக்காக இந்த மயானம் ஒதுக்கப்பட்டதாகவும், இதைப் பயன்படுத்திக்கொள்ள தங்களுக்கும் உரிமை உள்ளது என்று மற்றொரு பிரிவினரும் வாதங்களை முன் வைத்தனர்.
முறையாக புகார் அளித்தால் இதுகுறித்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என்று கூறிய காவல்துறையினர் அதுவரை சடலங்களை இந்த மயானத்தில் அடக்கம் செய்ய முயற்சிப்பதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.
Updated On: 19 Sep 2021 10:51 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    உலக பாரம்பரிய தினம் எதுக்கு கொண்டாடறோம் தெரியுமா..?
  2. உலகம்
    துபாயில் வெள்ளம்: விமான சேவை ரத்து! தண்ணீரில் சிக்கிய வாகனங்கள்
  3. உலகம்
    எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை!
  4. லைஃப்ஸ்டைல்
    உங்கள் பிள்ளைக்கு நீங்கள் 'சூப்பர் ஹீரோ'வா?
  5. தேனி
    தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்களே.. உங்களுக்கு ஒரு பணிவான...
  6. தேனி
    கைகளில் மருதாணி, மெகந்தி போட்டவர்களும் வாக்களிக்கலாம்!
  7. இந்தியா
    முதல்கட்ட தோ்தலில் களம் காணும் முன்னாள் ஆளுநா், 8 மத்திய அமைச்சா்கள்,...
  8. கல்வி
    சுவாமி விவேகானந்தரிடமிருந்து மாணவர்களுக்கான அழியா ஞானம்
  9. திருச்சிராப்பள்ளி
    இலங்கை அகதிகள் முகாமிலிருந்து முதல் வாக்காளர்! போராடி பெற்ற வாக்காளர்...
  10. இந்தியா
    மோடி ஆட்சியிலா சீனா, இந்தியாவை ஆக்கிரமித்தது..?