/* */

கலப்பட மருத்துவ முறையை கண்டித்து உண்ணாவிரதம்

கலப்பட மருத்துவ முறையை கண்டித்து உண்ணாவிரதம்
X

கலப்பட மருத்துவ முறையை கண்டித்து இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்றனர்.

சித்தா, யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட மருத்துவம் படித்தவர்கள் அனைவரும் அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு வகையான சிகிச்சை முறைகளை மேற்கொள்ளலாம் என மத்திய அரசு சமீபத்தில் அறிவிப்பு செய்தது. இந்த அறிவிப்புக்கு ஆங்கில மருத்துவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த அறிவிப்பை கண்டித்து பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இதன் அடிப்படையில் இந்திய மருத்துவ சங்க சேலம் கிளையின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் இந்திய மருத்துவ சங்க வளாகத்தில் வைத்து நடைபெற்றது. சங்க தலைவர் பாலமுருகன் தலைமையில் நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை முன் வைத்து கோஷங்களை எழுப்பினர்.

கலப்படம் மருத்துவ முறையால் எதிர்காலத்தில் மருத்துவத்துறை கேலிக் கூத்தாகும் நிலைக்கு தள்ளப்படும் என்றும் அறுவை சிகிச்சைக்காக சிறப்பான முறையில் பயிற்சி பெற்ற ஆங்கில மருத்துவத்தில் கலப்படம் மருத்துவ முறை கொண்டு வந்தால் எதிர்காலத்தில் மனித சமுதாயத்திற்கு ஆபத்தான சூழ்நிலை விளைவிக்கும் நிலை ஏற்படும் என்றும் எனவே மத்திய அரசு இதை உணர்ந்து கலப்பட மருத்துவமுறை திட்டத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

Updated On: 9 Feb 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?