/* */

கோவில் உண்டியல் திருட்டு

சேலம் மாநகரில் ஊரடங்கை பயன்படுத்தி கோவில் உண்டியலை திருடி சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

கோவில் உண்டியல் திருட்டு
X

சேலம் மாநகரில் ஊரடங்கை பயன்படுத்தி கோவில் உண்டியலை திருடி சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணாநகர் பகுதியில் ஸ்ரீ கந்தாரி மீனாட்சி மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் பண்டிகை நடைபெறும் நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு காரணமாக பண்டிகை நடத்தப்படாமல் இருந்துள்ளது.

இதற்கிடையே தற்போது நோய் தடுப்பு நடவடிக்கையாக பக்தர்களுக்கு அனுமதி இல்லாமல் தினசரி பூஜைகள் மட்டுமே நடைபெற்று வருகிறது. வழக்கம்போல் கோவில் பூசாரி நேற்று மாலை பூஜைகளை முடித்து விட்டு 6 மணியளவில் கோயில் நடையை சாத்திவிட்டு சென்றுள்ளார். பின்னர் இன்று காலை கோவிலை திறந்த போது கோயில் உண்டியல்கள் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக உண்டியல் திறக்கப்படாமல் இருந்ததை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் ஊரடங்கை பயன்படுத்தி இன்று அதிகாலை கோவிலில் இருந்த 2 உண்டியலை தூக்கி சென்று 100 மீட்டர் தூரத்தில் உள்ள சாலையில் வைத்து உண்டியலிருந்த பணத்தை திருடி சென்றுள்ளது தெரியவந்தது. இதையடுத்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Updated On: 16 May 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    இந்தியாவின் தேசிய பறவை மயிலை கொன்றால் எத்தனை ஆண்டு சிறைத்தண்டனை...
  2. இந்தியா
    இந்தியாவின் தேசிய விலங்கு புலிகள் ஊருக்குள் புகுவது ஏன்?
  3. கரூர்
    கரூர் எம்பி தொகுதியில் இதுவரை ரூ1.35 கோடி பணம் பரிசு பொருள் பறிமுதல்
  4. கோவை மாநகர்
    ஆரத்தி எடுத்த பெண்ணிற்கு பணம் கொடுத்தது குறித்து அண்ணாமலை விளக்கம்..!
  5. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் வாக்களிக்க நூதன வரவேற்பளித்த அரசு அதிகாரிகள்..!
  6. குமாரபாளையம்
    புனித வெள்ளியையொட்டி நடந்த சிலுவைப்பாதை..!
  7. லைஃப்ஸ்டைல்
    உளுந்துண்டு வாழ்ந்தால் வளம்காணும் உடலே..! எப்டீ? படீங்க..!
  8. நாமக்கல்
    தி.மு.க. அரசின் நலத்திட்டங்கள் பற்றி ராஜேஷ்குமார் எம்.பி. பேச்சு
  9. கோவை மாநகர்
    ஆரத்திக்கு அண்ணாமலை பணம் கொடுத்தாரா? விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு
  10. இந்தியா
    கங்கை நதி பற்றி இதுவரை தெரியாத உண்மைகள் இங்கே கட்டுரையாக...