/* */

டிச. 27ம் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் காலவரையறையற்ற போராட்டம்

டிச. 27ம் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் காலவரையறையற்ற போராட்டம்
X

வரும் 27ஆம் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் காலவரையறையற்ற போராட்டம் தொடங்க உள்ள நிலையில் 26ம் தேதி முதல் லாரி புக்கிங் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு லாரி புக்கிங் ஏஜெண்டுகள் சங்கத்தலைவர் ராஜவடிவேல் சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது அவர் கூறும் போது, லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ள காலவரையறையற்ற போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக வரும் 26 ஆம் தேதி முதல் லாரி புக்கிங் நிறுத்தப்படுவதாகவும், இதன்மூலம் உணவு தானிய பொருட்கள் கட்டுமானப் பொருட்கள் ஆகியவை புக்கிங் செய்யப்படமாட்டாது என்று தெரிவித்தார். இதன்மூலம், தமிழகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு ரூபாய் பத்தாயிரம் கோடி பொருட்கள் தேக்கமடையும் என்றும் பொதுமக்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்தில் எந்த தடையும் இருக்காது என்றும் தெரிவித்தார்.

ஏற்கனவே கொரோனா தொற்று பரவல் காரணமாக லாரி தொழில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசின் நடவடிக்கையால் லாரி உரிமையாளர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாவதால் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ராஜ வடிவேல் கோரிக்கை விடுத்தார். மேலும் டீசல் விலையை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நிர்ணயிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

Updated On: 22 Dec 2020 9:30 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை!
  2. லைஃப்ஸ்டைல்
    உங்கள் பிள்ளைக்கு நீங்கள் 'சூப்பர் ஹீரோ'வா?
  3. தேனி
    தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்களே.. உங்களுக்கு ஒரு பணிவான...
  4. தேனி
    கைகளில் மருதாணி, மெகந்தி போட்டவர்களும் வாக்களிக்கலாம்!
  5. இந்தியா
    முதல்கட்ட தோ்தலில் களம் காணும் முன்னாள் ஆளுநா், 8 மத்திய அமைச்சா்கள்,...
  6. கல்வி
    சுவாமி விவேகானந்தரிடமிருந்து மாணவர்களுக்கான அழியா ஞானம்
  7. திருச்சிராப்பள்ளி
    இலங்கை அகதிகள் முகாமிலிருந்து முதல் வாக்காளர்! போராடி பெற்ற வாக்காளர்...
  8. இந்தியா
    மோடி ஆட்சியிலா சீனா, இந்தியாவை ஆக்கிரமித்தது..?
  9. இந்தியா
    மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேகதாது திட்டத்தை அமல்! கர்நாடக...
  10. உலகம்
    உலகின் சிறந்த பாதுகாப்பு : அசத்தியது இஸ்ரேல்...!