/* */

சேலம் முள்ளுவாடி ரயில்வே கேட்டில் சிக்கிக்கொண்ட இருசக்கர வாகன ஓட்டிகள்

சேலம் முள்ளுவாடி ரயில்வே கேட்டில் சிக்கிக்கொண்ட இருசக்கர வாகன ஓட்டிகளால் அப்பகுதியில் அச்சம் நிலவி வருகிறது.

HIGHLIGHTS

சேலம் முள்ளுவாடி  ரயில்வே கேட்டில் சிக்கிக்கொண்ட இருசக்கர வாகன ஓட்டிகள்
X

ரயில்வே கேட்டில் சிக்கிக்கொண்ட வாகன ஓட்டிகள்.

சேலம் சந்திப்பிலிருந்து விருதாச்சலம் மற்றும் பெங்களூரில் இருந்து காரைக்கால் இடையே ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது முள்ளுவாடி கேட் பகுதியில் ரயில்வே மேம்பால பணிகள் நடைபெற்று வருவதால் ஒரு வழிப் பாதையை இருவழிப் பாதையாக போக்குவரத்து காவலர்கள் மாற்றி அமைத்துள்ளனர். இதனால் ரயில்கள் செல்லும்போது ரயில்வே கேட் மூடப்படுவதால் அடிக்கடி அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம்.

இந்நிலையில் இன்று முள்ளுவாடி கேட் பகுதியில் ரயில் தண்டவாள பராமரிப்பு பணி மற்றும் மின்சார வழியில் செல்வதற்கான மின்கம்பம் அமைக்கும் பணிக்காகவும், ரயில்கள் வருகைக்காகவும் ரயில்வே கேட் மூடப்பட்டது. அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகன ஓட்டிகள் 3 பேர் சிக்கிக் கொண்டனர். அங்கு இருந்த சக இருசக்கர வாகன ஓட்டிகள் ரயில்வே கேட்டை திறக்க ரயில்வே ஊழியரிடம் கூறியும் அவர் மறுத்து விட்டார்.

இதனால் அந்த வழியாக வந்த ரயில் அவர்களை மோதி செல்வதுபோல் சென்றதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சம் அடைந்தனர். ரயில்வே ஊழியர்களின் இந்த செயல் பொதுமக்களிடையே முகச்சுளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 21 Sep 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?