/* */

நீதிமன்ற வளாகத்தில் நீதிபதியை கத்தியால் குத்திய அலுவலக உதவியாளர் சஸ்பெண்ட்

சேலம் நீதிமன்றத்துக்கு பணிமாற்றம் செய்யப்பட்ட ஆத்திரத்தில் அலுவலக உதவியாளர் நீதிபதியை கத்தியால் குத்தியது தெரிய வந்தது

HIGHLIGHTS

நீதிமன்ற வளாகத்தில் நீதிபதியை கத்தியால் குத்திய அலுவலக உதவியாளர்   சஸ்பெண்ட்
X

சேலத்தில் நீதிபதியை கத்தியால் குத்தியதால் பணிடை நீக்கம் செய்யப்பட்ட அலுவலக உதவியாளர்  பிரகாஷ் 

சேலம் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதியை கத்தியால் குத்திய அலுவலக உதவியாளர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நான்காவது நீதிமன்ற நீதிபதியாக பொன்பாண்டி பணியாற்றி வருகிறார். நேற்று காலை வழக்கம்போல நீதிமன்றத்திற்கு வந்த நீதிபதி பொன்பாண்டியிடம், அலுவலக உதவியாளர் பிரகாஷ் என்பவர் நேராகச் சென்று தன்னை பணி மாறுதல் செய்தது தொடர்பாக விளக்கம் கேட்டாராம்.

அப்போது நீதிபதிக்கும் அலுவலக உதவியாளருக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அலுவலக உதவியாளர் பிரகாஷ், திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நீதிபதியை குத்த முயன்றுள்ளார். அப்போது நீதிபதி தடுத்தால் மார்பில் மட்டும் சிறிய கீறல் விழுந்தது.

இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து பிரகாஷை பிடித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் உடனடியாக நீதிபதியை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்று சேர்த்தனர். அலுவலக உதவியாளர் பிரகாஷ் ஓமலூர் நீதிமன்றத்தில் பணியாற்றி வந்த அவர், சமீபத்தில் சேலம் நீதிமன்றத்துக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார்.இதனால் ஆத்திரமடைந்த அலுவலக உதவியாளர், நீதிபதியிடம் விளக்கம் கேட்டபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவர் கத்தியால் குத்தியது விசாரணையில் தெரியவந்தது.

இது குறித்த புகாரின்பேரில் அஸ்தம்பட்டி காவல்துறையினர் பிரகாஷ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 11 நாள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி பொன் பாண்டியனை கத்தியால் குத்திய அலுவலக உதவியாளர் பிரகாஷை பணியிடைநீக்கம் செய்து சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.

Updated On: 2 March 2022 5:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?