/* */

சேலத்தில் எல்ஐசி ஊழியர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி நூதன போராட்டம்

சேலத்தில் எல்ஐசி ஊழியர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

சேலத்தில் எல்ஐசி ஊழியர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி நூதன போராட்டம்
X

 சேலத்தில் எல்ஐசி ஊழியர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுத்துறை நிறுவனமான எல்ஐசியின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு எல்ஐசி ஊழியர்கள் மற்றும் பல்வேறு தொழிற் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்றைய தினம் நாடு முழுவதும் எல்ஐசி பங்கு விற்பனையை கண்டித்து காப்பீட்டு கழக ஊழியர் சங்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக சேலம் காந்திரோடு பகுதியில் அமைந்துள்ள எல்ஐசியின் மண்டல அலுவலகத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட எல்ஐசி ஊழியர்கள் கலந்து கொண்டு கையில் மெழுகுவர்த்தி ஏந்தி எல்ஐசியின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட கோரி கோஷங்களை எழுப்பினர்.

ஊழியர்களின் இந்த கோரிக்கைக்கு மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை திட்டமிட்டபடி வரும் 28 மற்றும் 29 தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத் தலைவர் தர்மலிங்கம் தெரிவித்துள்ளார்.

Updated On: 10 March 2022 2:45 PM GMT

Related News

Latest News

  1. வழிகாட்டி
    இளைஞர்களை எழுச்சி பெறச் செய்த ஆன்மிக தூதர், விவேகானந்தர்..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஏழை வீட்டின் மகாராணி..! (சிறுகதை)
  3. வீடியோ
    எந்த கொம்பனாலும் மாத்த முடியாது | | உலகத்துலேயே Modi தான் Top |...
  4. இந்தியா
    காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,800 கோடி அபராதம்: வருமானவரித்துறை நோட்டீஸ்
  5. வீடியோ
    🔴LIVE : தயாநிதி மாறனை எதிர்த்து அண்ணாமலை மத்திய சென்னையில் சூறாவளி...
  6. மயிலாடுதுறை
    மயிலாடுதுறை ஏவிசி தன்னாட்சி கல்லூரியில் ஆண்டு விழா கொண்டாட்டம்..!
  7. ஆன்மீகம்
    செல்வம் தரும் கனகதாரா ஸ்தோத்திரம்: செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில்...
  8. ஆன்மீகம்
    புனித சனிக்கிழமையின் முக்கியத்துவம் தெரியுமா..?
  9. ஈரோடு
    ஸ்டாலின் வருகையையொட்டி ஈரோட்டில் நாளை மறுநாள் வரை ட்ரோன்கள் பறக்க
  10. திருவள்ளூர்
    வாக்காளர்களின் வீட்டிற்கு சென்று அழைப்பிதழ் வழங்கிய திருவள்ளூர்...