/* */

கோவில் நகைகளை உருக்கும் திட்டத்தை கைவிட இந்து முன்னணியினர் பேரணி

கோவில் நகைகளை உருக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி சேலத்தில் இந்து முன்னணியினர் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

கோவில் நகைகளை உருக்கும் திட்டத்தை கைவிட இந்து முன்னணியினர் பேரணி
X

கோவில் நகைகளை உருக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, சேலத்தில் இந்து முன்னணி அமைப்பினர் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நகைகளை உருக்கி வங்கிகளில் அடகு வைத்து அந்த வருவாயை கோயில்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த திட்டத்திற்கு இந்து முன்னணி அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக, இந்து முன்னணி அமைப்பின் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் வள்ளுவர் சிலை அருகிலிருந்து பேரணி நடத்தப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

கோயில்களில் உள்ள நகைகளை உருக்குவதற்கு தமிழக அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும், தங்க நகைகளை உருக்கும் திட்டத்தின் மூலம் ஊழல் நடக்க வாய்ப்பு உள்ளதாகவும், இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தார்.

எனவே இந்த திட்டத்தை கைவிட வலியுறுத்தி வரும் 26 ஆம் தேதி தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Updated On: 20 Oct 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தோல்வியுறும்போதுதான் காதல்கூட வெற்றி பெறுகிறது..!
  2. லைஃப்ஸ்டைல்
    இரு விழிகள் எழுதும் ஒரு புதிய கவிதை, காதல்..!
  3. லைஃப்ஸ்டைல்
    மகளின் முதல் ஹீரோ, 'அப்பா'.!
  4. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மாலை 3 மணி நிலவரம்: 59.55 சதவீதம்...
  5. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் மாலை 3 மணி நிலவரப்படி 54.13 சதவீத...
  6. ஈரோடு
    அந்தியூர் அருகே வாக்களிக்க வரிசையில் நின்ற மூதாட்டி மயங்கி விழுந்ததால்...
  7. லைஃப்ஸ்டைல்
    பிரெண்டி உள்ள பையனுக்கு லைப் கேரண்டி உண்டு..!
  8. லைஃப்ஸ்டைல்
    நீ இருக்கும்போது அறியாமல் விட்டுவிட்டேன் அன்னையே..! உன் அருமை...
  9. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, மின் தடையால், வாக்குப்பதிவு தேக்கம்..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வாக்கு அளித்தார்...!