/* */

சேலத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை: சாலையில் பெருக்கெடுத்த மழைநீர்

சேலத்தில் கொண்டலாம்பட்டி, சீலநாயக்கன்பட்டி, சேலம் ஆட்சியர் அலுவலம், அஸ்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

HIGHLIGHTS

சேலத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை: சாலையில் பெருக்கெடுத்த மழைநீர்
X

சேலம் பழைய பேருந்து நிலையத்தில் பெய்த மழை.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று 103 மில்லி மீட்டர் அளவிற்கு மழை அளவு பதிவாகி இருந்தது.

சேலம் மாவட்டத்தில் காலை முதலே மேக மூட்டம் சூழ்ந்து காட்சியளித்தது. இந்த நிலையில் மதிய நேரத்தில் கருமேகங்கள் சூழ்ந்து மிதமான மழையாக துவங்கி, 1 மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக சேலத்தில் கொண்டலாம்பட்டி, சீலநாயக்கன்பட்டி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலம், பழைய பேருந்து நிலையம், அஸ்தம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

இதனால் மழைநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. சேலம் மாவட்டத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

Updated On: 16 Oct 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    இசையில் மயங்கியதால் தொட்டியம் வந்தடைந்த மதுரை காளியம்மன் வரலாறு
  2. இந்தியா
    இந்தியாவின் தேசிய பறவை மயிலை கொன்றால் எத்தனை ஆண்டு சிறைத்தண்டனை...
  3. இந்தியா
    இந்தியாவின் தேசிய விலங்கு புலிகள் ஊருக்குள் புகுவது ஏன்?
  4. கரூர்
    கரூர் எம்பி தொகுதியில் இதுவரை ரூ1.35 கோடி பணம் பரிசு பொருள் பறிமுதல்
  5. கோவை மாநகர்
    ஆரத்தி எடுத்த பெண்ணிற்கு பணம் கொடுத்தது குறித்து அண்ணாமலை விளக்கம்..!
  6. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் வாக்களிக்க நூதன வரவேற்பளித்த அரசு அதிகாரிகள்..!
  7. குமாரபாளையம்
    புனித வெள்ளியையொட்டி நடந்த சிலுவைப்பாதை..!
  8. லைஃப்ஸ்டைல்
    உளுந்துண்டு வாழ்ந்தால் வளம்காணும் உடலே..! எப்டீ? படீங்க..!
  9. நாமக்கல்
    தி.மு.க. அரசின் நலத்திட்டங்கள் பற்றி ராஜேஷ்குமார் எம்.பி. பேச்சு
  10. கோவை மாநகர்
    ஆரத்திக்கு அண்ணாமலை பணம் கொடுத்தாரா? விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு