/* */

போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்ததால் போதையில் ஓட்டுநர் தீக்குளிப்பு

சேலத்தில் காவல்துறையினர் வாகனத்தை பறிமுதல் செய்ததால் மதுபோதையில் இருந்த ஓட்டுநர் நடு ரோட்டிலேயே தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்ததால் போதையில் ஓட்டுநர் தீக்குளிப்பு
X

சந்தோஷ்.

சேலம் மாவட்டம், அமானி கொண்டலாம்பட்டியை அடுத்த அரசமரத்து கரட்டூர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். சரக்கு ஆட்டோ ஓட்டுநரான இவர், நேற்று இரவு கொண்டலாம்பட்டி அருகில் வாகனத்தை ஓட்டி வந்துள்ளார்.

கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது ஓட்டுநர் சந்தோஷ் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. இதனால் வாகனத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அங்கிருந்து சென்ற சந்தோஷ் சிறிது நேரத்தில் நடு ரோட்டிலேயே தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டு அங்கும் இங்குமாக அலறியடித்து ஓடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் சந்தோசை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுமார் 80 சதவிகித தீக்காயங்களுடன் சந்தோஷ் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். வாகனத்தை பறிமுதல் செய்த காரணத்திற்காக சந்தோஷ் தற்கொலைக்கு முயன்றாரா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Updated On: 13 March 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பு: இது ஆரோக்கியமான அரசியலுக்கு அறிகுறி
  2. அரசியல்
    ‘ரூ.1000 கிடைக்கவில்லை’தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சரிடம் முறையிட்ட...
  3. கோவை மாநகர்
    கோவை மாவட்ட ஆட்சியரை கண்டித்து நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்..!
  4. தமிழ்நாடு
    செந்தில் பாலாஜியின் சிறைக்காவல் ஏப்ரல் 4ம் தேதி வரை நீட்டிப்பு
  5. கோவை மாநகர்
    அண்ணாமலையின் வேட்பு மனுவை நிராகரிக்க அதிமுக, நாம் தமிழர் கோரிக்கை
  6. கோவை மாநகர்
    பொய் சொல்லியே பழக்கப்பட்டவர் அண்ணாமலை: சிங்கை ராமச்சந்திரன்...
  7. வீடியோ
    அரைச்ச மாவை அரைக்கும் திமுக ! வச்சி செய்த Annamalai ! #annamalai...
  8. இந்தியா
    டிக்கெட் முன்பதிவு செய்த ரயிலில் தொந்தரவா..? 139 பேசும்..!
  9. காஞ்சிபுரம்
    உரிய ஆவணங்கள் இன்றி பைக் வாங்க வந்தவரிடமிருந்து 2 லட்சம் ரூபாய்...
  10. சினிமா
    தலைவர் 171 ஷூட்டிங் எப்ப தொடங்குது தெரியுமா?