/* */

சேலத்தில் சுவர் இடிந்து விழுந்த இடிபாடுகளுக்கிடையே வாலிபர் சடலம்

சேலத்தில் சுவர் இடிந்து விழுந்த இடிபாடுகளுக்கிடையே வாலிபர் சடலம் கண்டெடுக்கப்பட்டது. கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை.

HIGHLIGHTS

சேலத்தில் சுவர் இடிந்து விழுந்த இடிபாடுகளுக்கிடையே வாலிபர் சடலம்
X

வாலிபர் உடல் கண்டெடுக்கப்பட்ட இடிந்த வீடு

சேலம் குகை ராமலிங்கசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் மளிகை வியாபாரி ஆறுமுகம். இவர் அப்பகுதியில் தனக்கு சொந்தமான சுமார் 250 சதுர அடி இடத்தில் சிதிலமடைந்து இருந்த பழைய சுவரை இடித்துவிட்டு புதிய வீடு கட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

நேற்றைய தினம் பழைய சுவர்களில் ஒருபகுதியை இடித்துள்ளனர். மீதி பகுதியை இன்றுகாலை இடிக்க முயன்றபோது அந்த சுவர் ஏற்கனவே விழுந்து காணப்பட்டது. மேலும் அந்த சுவருக்கு அடியில் வாலிபர் சடலம் ஒன்றும் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். போலீசாருக்கு தகவல் கொடுக்கப்படவே, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இடிபாடுகளுக்கிடையே இருந்த சடலத்தை மீட்டனர். விசாரணையில் அதேபகுதியை சேர்ந்த ராஜேஷ்குமார்(20) என்பது தெரியவந்தது.

இதனை அறிந்த ராஜேஷ்குமார் உறவினர்கள் அப்பகுதியில் கூடி கதறி அழுதனர். ராஜேஷ்குமார் எதற்காக அந்த இடத்திற்கு வந்தார்?. அடித்து கொல்லப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 1 Dec 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் விறுவிறுப்பு: 2 மணி நேரத்தில் 12.88 சதவீதம்...
  2. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  3. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  4. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  5. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  6. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  7. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  10. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...