/* */

பேரிடர் காலங்களில் தற்காத்து கொள்வது எப்படி? விழிப்புணர்வு ஒத்திகை

பேரிடர் காலங்களில் பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்வது குறித்து விழிப்புணர்வு ஒத்திகை, சேலத்தில் நடைபெற்றது.

HIGHLIGHTS

பேரிடர் காலங்களில் தற்காத்து கொள்வது எப்படி? விழிப்புணர்வு ஒத்திகை
X

சேலத்தில் பேரிடர் காலங்களில் பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்வது குறித்து விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

சர்வதேச இயற்கை பேரிடர் பாதிப்பு குறைப்பு தினத்தை முன்னிட்டு, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், பேரிடர் தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் முன்னிலையில் நடைபெற்றது. இதில் மழை காலங்களில் பேரிடர் பாதிப்புகள் ஏற்படாமல் பாதுகாத்திடவும், பொதுமக்களிடையே உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் ஒத்திகை நடைபெற்றது.

குறிப்பாக, மழைக்காலங்களில் பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் எதிர்பாராதவிதமாக ஏற்படுகின்ற தீ விபத்துகள், சாலை மற்றும் கட்டிட விபத்துகளின் போது பொதுமக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் விளக்கமளித்தனர்.

மேலும், இயற்கையின் சீற்றங்களின் போது ஏற்படுகின்ற புயல், மழை,வெள்ளம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளில் இருந்து செயற்கையாக ஏற்படுகின்ற பேரிடர் பாதிப்புகள் வரை மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் மிதவை படகுகள், உயிர்காக்கும் மிதவை உபகரணங்கள், கட்டிட இடிபாடுகளின் போது அவசரகால மீட்பு இயந்திரங்கள்,மரம் அறுக்கும் இயந்திரங்கள், தீயணைப்பான்கள் உள்ளிட்ட நவீன இயந்திரங்களைக் கொண்டு ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.

Updated On: 13 Oct 2021 1:41 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    ஐஏஎஸ், ஐபிஎஸ் படிப்பிற்கு மாணவர்களை தூண்டிய திரைப்படம் பற்றி
  2. சேலம்
    சேலம் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி வேட்புமனு ஏற்பு
  3. தேனி
    பல மணி நேர பரிசீலனைக்கு பிறகு டிடிவி தினகரனின் வேட்பு மனு ஏற்பு
  4. அரசியல்
    தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர்: அமித்ஷா கடந்த கால பேச்சின் பின்னணி
  5. அரசியல்
    அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பு: இது ஆரோக்கியமான அரசியலுக்கு அறிகுறி
  6. அரசியல்
    ‘ரூ.1000 கிடைக்கவில்லை’தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சரிடம் முறையிட்ட...
  7. கோவை மாநகர்
    கோவை மாவட்ட ஆட்சியரை கண்டித்து நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்..!
  8. குமாரபாளையம்
    பள்ளிபாளையம் அ.தி.மு.க. தேர்தல் பணிமனை திறப்பு..!
  9. தமிழ்நாடு
    செந்தில் பாலாஜியின் சிறைக்காவல் ஏப்ரல் 4ம் தேதி வரை நீட்டிப்பு
  10. கோவை மாநகர்
    அண்ணாமலையின் வேட்பு மனுவை நிராகரிக்க அதிமுக, நாம் தமிழர் கோரிக்கை