/* */

இட ஒதுக்கீடு போராட்டத்தில் சிறை சென்று வந்த சேலம் தொண்டர்களுக்கு பாமக வரவேற்பு

இடஒதுக்கீடு போராட்டத்தில் பஸ் கண்ணாடி உடைத்து சிறை சென்று வந்த தொண்டர்களுக்கு பாமக நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்பு

HIGHLIGHTS

இட ஒதுக்கீடு போராட்டத்தில் சிறை சென்று வந்த சேலம் தொண்டர்களுக்கு பாமக வரவேற்பு
X

சிறையிலிருந்து வெளிவந்த பாமக தொண்டர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்ற சட்டமன்ற உறுப்பினர் அருள்.

கடந்த 1ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற உயர்நிலை கிளை வன்னியர் இட தனி ஒதுக்கீடு ரத்து செய்து அரசாணை தீர்ப்பு வழங்கியது. அதனை எதிர்த்து தமிழகம் முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதில் கிழக்கு மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற போராட்டத்தில் பஸ் கண்ணாடி உடைத்ததாக பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த வெங்கடேசன், பெரியசாமியை, ஆகிய இரண்டு இளைஞர்களை கைது செய்து கடந்த முப்பது நாட்களாக சேலம் மத்திய சிறைச்சாலையில் இருந்தனர்.

அவர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் பிணை பெற்று உத்தரவின் அடிப்படையில் இன்று விடுதலையாகி வெளியே வந்தனர். அவர்களை பாட்டாளி மக்கள் கட்சி சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயபிரகாஷ் தலைமையில் வன்னியர் சங்க மாநில செயலாளர் கார்த்தி சேலம் மாநகர மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான இரா. அருள் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் மலர் மாலை அணிவித்து பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்.

Updated On: 30 Nov 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உழவு உயிர்பெற்றால் களஞ்சியம் நிரம்பும்..!
  2. வீடியோ
    முக்கிய புள்ளிகளுக்கு சம்மன் ரெடி ! காத்திருக்கும் அடுத்தடுத்த Twists...
  3. கல்வி
    தத்துவம் பேசும் வித்தகன் ஆகலாமா..?
  4. ஈரோடு
    ஈரோட்டில் தகிக்கும் வெயில்: 2வது நாளாக 107.6 டிகிரி வெயில் பதிவு
  5. இந்தியா
    துப்பாக்கியுடன் கிராமத்தில் புகுந்து தேர்தலை புறக்கணிக்க கூறிய...
  6. ஈரோடு
    கோடை வெயில் பாதுகாப்பு வழிமுறை: ஈரோடு மாவட்ட ஆட்சியர் கொடுத்த டிப்ஸ்
  7. ஈரோடு
    அந்தியூர் அருகே உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.1.13 லட்சம் பறிமுதல்
  8. குமாரபாளையம்
    காவிரி கரையில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் கட்டுமான பணி தீவிரம் !
  9. லைஃப்ஸ்டைல்
    காதல், சர்வதேச பொதுமொழி..! ஆயினும் அது புதுமொழி..!
  10. லைஃப்ஸ்டைல்
    துக்கம் என்று வந்துவிட்டால், அக்கா வந்து முதலில் நிற்பாள்..!