/* */

விவசாய பணிக்கு 100 நாள் வேலை ஆட்கள்: விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சேலத்தில் 100 நாள் வேலை ஆட்களை விவசாய பணிக்கு திருப்பிவிட வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

விவசாய பணிக்கு 100 நாள் வேலை ஆட்கள்: விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
X

சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் .

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், 100 நாள் வேலை ஆட்களை விவசாய பணிக்கு திருப்பிவிட வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாநில பொதுச் செயலாளர் சுந்தரம் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த விவசாயிகள், தங்கள் கையில் கரும்பு, மண்வெட்டி, மண்சட்டி உள்ளிட்ட விவசாய பொருட்களை ஏந்தியவாறு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

தமிழகத்தில் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் தற்போது 150 நாளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விவசாய பணிக்கு ஆட்கள் இல்லாமல் விவசாயமே அழியும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Updated On: 18 Oct 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  2. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  3. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  4. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  5. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  8. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  9. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  10. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு