சேலம் அருகே ரூ. 5 1/2 லட்சம் குட்கா பறிமுதல்!

சேலம் அருகே ரூ. 5 1/2 லட்சம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
சேலம் அருகே ரூ. 5 1/2 லட்சம் குட்கா பறிமுதல்!
X

சேலம் அருகே ரூ. 5 1/2 லட்சம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பெங்களூருவிலிருந்து சேலத்துக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 5 1/2 லட்சம் மதிப்புள்ள குட்கா மற்றும் 2 கார்கள் பறிமுதல் செய்யப்படட்ன. இது தொடர்பாக தாபா ஹோட்டல் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒமலூரை அடுத்த காமலா புரம் பிரிவு ரோடு அருகே பெங்களூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ராஜஸ்தானின் ஜோத்பூர் பகுதியைச் சேர்ந்த சங்கர் சிங் ஜாட்வால் என்பவரின் மகன் மான்சிங் தாபா ஒன்றை நடத்தி வருகிறார். இந்த பகுதியில் 12 ஆண்டுகளாக சிறப்பாக நடத்தி வரும் ராஜஸ்தானி தாபாவில் இந்த வழியே பயணிக்கும் பலரும் சாப்பிட்டு செல்வது வழக்கம். இவர் சமீக காலமாக குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், தடை செய்யப்பட்ட பொருட்களை காரில் கடத்தி வருவதாகவும் ஓமலூர் காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் காமலாபுரம் பிரிவு அருகே அமைந்துள்ள ராஜஸ்தானி ஹோட்டல் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். காவல்துறையினரைப் பார்த்ததும் ஒரு கார் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுள்ளது. 2 கார்கள் பிடிபட்டன.

பிடிபட்ட காரைச் சோதனை செய்த போது அதில் மூட்டைகளில் குட்கா பொருட்கள் இருந்தது கண்டிபிடிக்கப்பட்டது. காவலர்கள் அந்த கார் உட்பட 2 கார்களை பறிமுதல் செய்து , ஓட்டி வந்தவரையும் கைது செய்தனர்

பெங்களூருவிலிருந்து சேலத்துக்கு குட்கா கடத்தி வரப்பட்டது தொடர்பாக தாபா உரிமையாளர் மான்சிங்கை கைது செய்தனர். மொத்தம் 5 1/2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் 9 லட்சம் மதிப்புள்ள 2 கார்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பிச் சென்ற காரை போலீசார் தேடி வருகின்றனர்.

Updated On: 4 Jun 2023 4:37 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு மாநகரம்
    அரசு நலத்திட்ட உதவிகள் பெற விவரங்களை பதிவு செய்ய வேண்டும்
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    தொழில்நுட்ப வளர்ச்சி பயன்பாடு குறித்து திருச்சி கல்லூரியில்...
  3. மணப்பாறை
    திருச்சி தி.மு.க. முன்னாள் அமைச்சர் குடும்பத்தினருக்கு 3 ஆண்டு சிறை...
  4. காஞ்சிபுரம்
    மகளிர் மகப்பேறு திட்டத்தில் 2 ஆண்டு ஆகியும் பணம் வரவில்லை என...
  5. பெருந்துறை
    மரவள்ளி கிழங்கு வாரியம் அமைக்க வேண்டும்:விவசாயிகள் வலியுறுத்தல்
  6. ஈரோடு மாநகரம்
    ஈரோட்டில் இரண்டு மாதத்திற்கு பிறகு மீண்டும் தொடங்கிய ஜவுளி சந்தை
  7. ஈரோடு மாநகரம்
    ஈரோடு மாவட்டத்தில் 42 கிராமங்களில் வேளாண் வளர்ச்சி திட்டம்
  8. கோவில்பட்டி
    காற்றாலை நிறுவனத்தை கண்டித்து கோவில்பட்டியில் விவசாயிகள் போராட்டம்
  9. கோவில்பட்டி
    தமிழக ஹாக்கி, ஹேண்ட்பால் அணிகளுக்கு கோவில்பட்டி மாணவர்கள் தேர்வு
  10. வாசுதேவநல்லூர்
    தென்காசி அருகே முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா