/* */

ஓமலூர் அருகே வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற நான்கு பேருக்கு 1லட்சம் அபராதம் - வனத்துறை நடவடிக்கை

ஓமலூர் அருகே டேனிஸ்பேட்டை வனப்பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற நான்கு பேருக்கு 1லட்சம் அபராதம் விதித்து வனத்துறை நடவடிக்கை

HIGHLIGHTS

ஓமலூர் அருகே வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற நான்கு பேருக்கு 1லட்சம் அபராதம் - வனத்துறை நடவடிக்கை
X

டேனிஸ்பேட்டை வனப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாட முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்த துப்பாக்கி பறிமுதல்.

சேலம் மாவட்டம், டேனிஸ்பேட்டை பகுதியில் சேர்வராயன் மலைத்தொடரில் மான், பன்றி, முயல், அறிய வகை சருகு மான் உள்ளிட்ட வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றனர். இந்தநிலையில் கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி மான், பன்றி, முயல் உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாடுவதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து வனத்துறை அதிகாரி டேனிஷ்பேட்டை வனச்சரகர் பரசுராமமூர்த்தி தலைமையில் வனப்பகுதிகளில் ரோந்து பணிகளில் ஈடுபட்டனர்.

அப்போது சேலம் பகுதியை சேர்ந்த, சரவணன், இளங்கோ, ரமேஷ், சதீஷ்குமார் ஆகியோர் விலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டு துப்பாக்கியுடன் வனப்பகுதியில் சுற்றி திரிந்துள்ளனர். அப்பொழுது அவர்களை பிடித்து விசாரித்தனர். பின்னர் அவர்கள் விலங்குகளை வேட்டையாடும் நோக்கத்தில் வந்ததை அடுத்து நான்கு பேரையும் கைது செய்து வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். இதைதொடர்ந்து அவர் மீதும் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் தலா 25ஆயிரம் ரூபாய் வீதம் 1லட்சம் ரூபாயை இணைக்கட்டணமாக வசூலித்தனர். பின்னர் அவர்களிடம் வனவிலங்குகளை வேட்டையாடுவது குற்றம், இனிமேல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறி எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

Updated On: 17 Jun 2021 5:49 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் கூடுதல் பேருந்துகள் இல்லாததால் பக்தர்கள் அவதி
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி : 2ம் நாளான நேற்று ஆயிரக்கணக்கில்...
  4. வந்தவாசி
    யோக நரசிம்ம பெருமாள் கோயிலில் சித்திரை மாத சுவாதி விழா
  5. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  6. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  7. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  8. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  9. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  10. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்