Begin typing your search above and press return to search.
மேட்டூரில் தமிழக முதலமைச்சரின் கவனத்தை ஈர்த்த சௌமியா..
மேட்டூரில் தமிழக முதலமைச்சரின் கவனத்தை ஈர்த்த சௌமியா.
மேட்டூர் அணையை திறக்க சேலம் சென்ற தமிழக முதலமைச்சர் அணை திறப்பிற்கு பிறகு பொதுமக்களிடையே மனுக்கள் பெற்றுள்ளார். அதில் ஒரு கவரில் சௌமியா தனது 2 பவுன் சங்கிலியை கொரோனா நிதிக்காக கொடுத்துள்ளார்.. இது குறித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் மேட்டூர் அணையைத் திறக்கச் சென்றபோது பெறப்பட்ட மனுக்களில் சகோதரி சௌமியாவின் இக்கடிதம் கவனத்தை ஈர்த்தது. பேரிடர் காலத்தில் கொடையுள்ளத்தோடு உதவ முன்வந்த அவரது எண்ணம் நெஞ்சத்தை நெகிழ வைக்கிறது. பொன்மகளுக்கு விரைவில் அவரது படிப்பிற்கேற்ற வேலை கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.